செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

யோகவும் நானும்...!

அல்-எய்ன்  பயணம் - Al-Ain Trip

யோகவுக்காக போட்ட விடுமுறையின் நிறைவாக, கடந்த வெள்ளிக்கிழமை எங்காவது சற்று தூரமாக சென்று வரலாம் என எங்க குடும்ப நண்பர் முகுந்தன் சார் கூட சேர்ந்து முடிவு செய்தோம். ஏன்னா, அவர்கிட்ட தான் வண்டி இருக்கு... :) :) :) 

நம்மகிட்ட வண்டியேது???. எல்லாம் நண்பர்களின் உதவியினால் தான், சகல இடங்களுக்கும் சென்று வந்துள்ளோம் :) 

அல்-எயின் போய் பார்க்கலாம் என முடிவானது. அல்-எயின் என்பது துபாயில் இருந்து சுமார் 100கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அமீரகத்தின் Garden City. நிறைந்த மரங்களால் சூழப்பட்ட நகரம். அங்கங்கே விவசாயமும் நிறைய இருக்கும். குளிரூட்டப்பட்ட இண்டோர் விவசாய முறை. இந்நகரின் சிறப்பம்சம் என நிறைய இருக்கிறது.

அதில் பிரசித்தி பெற்றது Zoo. அமீரகத்தின் மிகப்பெரிய விளங்கியல் பூங்கா. வெள்ளை சிங்கம், வெண்புலி, பென்குயின் என அரிய வகைகளும் காண இயலும். வெயிலின் காரணத்தால், அதிக நேரம் வெட்ட வெயிலில் சுற்ற முடியாததால், குளிர் கால டிரிப்பாக இருக்கட்டும் என அட்வான்ச் புக்கிங்ல ஒத்தி வெச்சிட்டோம்.

இங்கு தற்சமயம் வெயில் நம் டிக்கியை பஞ்சராக்குவதால்மதியம் மூணு
ணிக்கு தான் வீட்டிலிருந்து புறப்பட்டோம்.

முதலில் hili archaeological park சென்றோம். மொட்ட வெயிலில், பார்க்கின் வாட்ச்மேன் தவிர ஒருத்தரும் இல்லை. மிகப்பெரிய பூங்கா,குளிர்காலத்தில் வார இறுதியில் பொழுதுபோக்க நல்ல அருமையான இடம்இதன் சிறப்பு UNESCO world heritage site. உலக பாரம்பரிய இடங்களில் ஒன்று.2000-2500 BC ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கு வாழ்ந்த தடையங்கள் இருக்கும் இடம். பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள்

புகைப்படங்களை பாருங்கள்.
UNESCO WORLD HERITAGE 
அந்த காலத்து சமாதி (2000-2500 BC )





அடுத்து, அல்-அய்ன் ஒயாசிஸ் என்ற ஈச்சமர தோட்டங்கள் நிரம்பிய பாலைவன சோலை. இது மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது
பெரிய நிலப்பரப்பு - அதனால் காரிலேயே போகலாம்
நாங்கள் வண்டியை பார்க் செய்து நடக்க எத்தனிக்கையில், ஒரு தமிழ் குரல். சார், காரிலேயே போங்கள் என்று. யாரென்று பார்த்தால், அதன் வாட்ச் மேன், இலங்கை தமிழர். நாங்கள் பேசுவதறிந்து, தமிழில் பேசினார்.

பல வகையான பேரிச்சம் பழம்

மற்றொரு வகை
இவ்வாறு கிட்டதட்ட நூறு வகை இருக்கு

அற்புதமான இடம். அமீரகத்தில் உள்ள பலரும் கூட அறியாத இடம் இது. பேரிச்சம் பழங்கள், கிட்டதட்ட நூறு வகைக்கும் மேல இருக்கும் தோட்டம் என நினைக்கிறேன்.

காரில் சிறிது சென்று ஓரமாக நிறுத்திவிட்டு, தோட்டத்தின் உள் நுழைவோம். அனைத்தும் பழுத்து உண்ண எங்களுக்காக காத்திருந்தது போல :). ஒன்னைக்கூட விடலை. எத்தனை ருசி... அட அட அட... சூப்பர்...

இன்னொரு விஷயம், நம் ஊரில் இருப்பது போல வாய்க்கால் வழி தண்ணீர் தான் தோட்டம் முழுவதற்கும். மேலும் மற்றொரு அதிசயம், இத்தண்ணீர், நம்மூரில் இருப்பது போல போர்வெல் தண்ணீர், நம்ப முடிகிறதா! பாலைவன நிலத்தில் நிலத்தடி தண்ணீர்... உண்மையான பாலைவனத்தின் சோலை...!
வாய்க்கால்

மரத்தில் நார்த்தங்காய் பறிக்குறாங்க


வாய்க்காலில் விளையாட்டு யோகவ்விற்கு
அடுத்து, அங்கிருந்து ஜபல் ஹஃபீத் எனும் அமீரகத்தின் மலை உச்சிக்கு சென்றோம். இது கிட்டதட்ட நம்ம மருதமலை உச்சி போலவும், பழனி கோவில் உச்சி போல நினைத்துக் கொள்ளுங்கள். வண்டியில் வளைவுகளில் போக சூப்பரா இருக்கும்.

Jabel Hafeet - View of Al Ain City from mountain




குளிர்காலத்தில் சென்றால், மூடுபனி நம்மளை படர்ந்து, பற்கள் டேன்ஸாட போயிடும் :). இன்றோ, சூடு ஓட ஓட்டம் விரட்டுது. முடிந்து கீழே அடிவாரத்தில் வெந்நீரூற்று இருக்கும். அங்கு சென்றோம். இது அனைத்தும் இயற்கையின் விந்தை. அங்கு எக்கசக்க கூட்டம்.

கொண்டு போன சோத்துமூட்டையை அவிழ்த்து சாப்பிட்டால், ஹாட் பாக்ஸ்ல வைத்தது போல சூடாவே இருந்தது.

அருமையான டிரிப் :)

புதன், 15 ஜனவரி, 2014

வாழ்க்கையில் கற்ற மற்றொரு பாடம்…!!! - Your small life is someone’s big dream



நேற்று எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமொன்று நடந்தது. இதே (துபாயில்) அமீரகத்தில் வாழும் நாம் அறியா ஒரு மனிதனின் இருண்ட பகுதியை அறிய நேரிட்டது. ஆடு ஜீவிதம் கதையில் வந்த உண்மை சம்பவம் போல.  அதை பற்றியதொரு பதிவு.

பொதுவாக துபாயில் வந்து பணிபுரிபவர்களை எப்படியெல்லாமோ நினைக்கும் நிலையில் வேறொரு வாழ்க்கையை வாழும் ஒருவரைச் சந்தித்தேன். நம் நாட்டில் உள்ள மக்கள் ஏனையபேர் துபாய் என்றாலே ஆடம்பரம், பணக்கார மக்கள், ஊர், துபாயில் பணம் காய்க்கும் மரம் இருக்கும் என்ற நினைப்பு தான் வரும்... :)

நேற்றைய நாள் ஆணிப்புடுங்க புஜேரா செல்ல நேர்ந்தது. ஃபுஜேரா செல்வது என்றாலே நயந்தாராவை பார்க்க போவது போல ஒரு கொண்டாட்டம் நமக்கு. நிற்க - எங்கூட்டு அம்மணி, மற்றும் தாய்குலங்கள் ஃபுஜேரா செல்வது என்றாலே மனதில் என்னமோ ஊட்டி செல்வது போன்ற குதூகலம் வந்துவிடுகிறது என வாசிக்கவும். நானும் நல்லவனுங் :) :) இது சத்தியமுங் அம்மணி....

காரணம் காரில் செல்லும் வழி, செம்ம அட்வென்சரா இருக்கும். துபாயில் இருந்து 3 மணி நேர பயண தூரம். பாலைவனம், மலைகள், கொண்டூசி வளைவுகள், பள்ளத்தாக்கு போன்ற மலைகளின் ஊடே செல்லும் வழித்தடம். அவ்வாறு கடந்து சென்றால் நம் பாண்டிச்சேரியை போல ஒரு பக்கம் முழுவதும் கடலும், மற்றொரு பக்கம் ஊரும் இருப்பது இதன் சிறப்பு.

என் வேலை, மீட்டிங், மெஷெர்மண்ட் செக் செய்வது, அளப்பது என எல்லாம் முடிந்து 4 மணியளவில் என்னுடன் வந்த அலுவலக நண்பருடன் சாப்பிட புறப்பட்டோம். கொலைப்பசியில் இருந்ததால் எங்கே வகுத்த நிரப்பலாம் என்ற அயின்ஸீன் கொஸ்டீன் எழுந்தவுடன், கடற்கரை ஒட்டி அமைந்த ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம் என்ற என் நீண்ட நாள் ஆசைக்கு மூடுவிழா எடுத்தோம். 20கி.மி.ல் இருக்கும் கொர்ஃபக்கான் என்ற இடத்தில் பீச் ஒட்டிய .கோல்டன் ஃபோர்க் என்ற அருமையான உணவகம் போய்ச் சேர்ந்தோம்.

கம்பெனிக் காசில் திணிசு திணிசா ஆர்டர் செய்துவிட்டு (ஓசின்னா பெனாயிலே குடிப்போம், விட்டிருவோமா என்ன JJJ) கடலை காணும்போது மனசில் அவ்வளவு ஒரு இனம்புரியா சந்தோஷம் தாண்டவமாடியது. இமாலய சரக்கு கப்பல் வருவதும், பாட்ஜ் படகு வழி நடத்துவதும், நிறைய மீன்பிடி படகுகள் செல்வதும் என பார்த்துக் கொண்டே உணவருந்தினேன். அதில் ஒரு இடத்தில் மீன் பிடிக்கும் முறையில் இருந்த செய்முறை வித்தியாசம், அதிக ஆர்வத்தைக் கொடுத்தது. வைத்த கண் வாங்காமல் அங்கே பார்க்க நேரிட்டது.

சாப்பிட்டப் பின், ஆர்வமிகுதினாலும் வகுரு நிரம்பியதாலும் ரிலாக்ஸாக அருகில் சென்று பார்த்தோம். சுமார் 750 மீட்டர் (முக்கா கிலோமீட்டர்) சுற்றளவு கொண்ட ராட்ஷச மீன்வலையை கடலில் விரித்து வைத்திருந்தார்கள். அவ்வலையை கரைக்கு இழுக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள்.

வலையின் இருமுனையும் (இரண்டு பக்கமும்) 4x4 பிக்-அப் காரைக் கொண்டு ரிவெர்ஸாக ஓட்டி கயிற்றை இழுக்கிறார்கள். அந்த பிக்-அப் ஜீப் முன்னும் பின்னும் சென்று மீதி வலையை கரைப்பகுதிக்கு கொண்டுவர செய்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டி ஓட்ட ஒருத்தர், மீன்பிடி கயிற்றை வண்டியில் கட்டவும், ரிவெர்ஸ் போய் வந்தவுடன் கயிற்றை அவிழ்க்கவும் மீண்டும் கட்டவும் என ஒருத்தர்,  இழுத்த கயிர்றை சுருட்டி வைக்க ஒருவர் என மூவர் டீம் ஒரு முனையில். இதே போன்றொரு டீம் மறுமுனையும்,இதே வேலையை கோர்வையாக இழுக்கிறார்கள். சுறுசுறுப்பு என்றால் அப்படி ஒரு சுறுசுறுப்பு. (நம்மூரில் ஏலேலோ ஐலசா என்று நிறைய மனிதர்கள் ஒன்றாக இழுப்பார்களே, அவ்வேலையை இவ்வாறு செய்கிறார்கள். சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலையில் பெரிய திமிங்கலம் மாட்டிகிச்சு என்று இழுப்பார்களே… இந்த பல்லே பல லட்சம் போகும், அதன் தோல் 1 கோடிக்கு மேல போகும் என்று அடிச்சு விடுவார்களே அதே தான்…)

அந்த மூவர் அணியில் இருக்கும் ஒரு மலையாளியிடம் பேச்சுக் கொடுத்தேன். மனிதருக்கு 50 வயது இருக்கும். மனுஷன் என்னமா உழைக்கிறார்!!! மொத்த வலையையும் கடற்கரைக்கு கொண்டு வர இன்னும் எவ்வளவு நேரமாகும், என கேட்டவுடன், இன்னும் 1 மணிக்கு மேலாகும் என்றார். இந்த வலையில் அகப்படும் மீன்கள் சுமார் 6 வண்டி நிறையும் என்றார். தோராயமாக 30,000 திர்ஹாம்ஸ் கூட போகும் என்றார். மனதில் இருந்த பிரம்மாண்டம் படர்ந்ததால், பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன்.

பேச்சினூடே அவரின் வாழ்க்கையையும், காசிக்கோடு சொந்த ஊர் எனவும், அமீரகத்தில் 16 வருடம் இருக்கிறார் எனவும், சவுதியில் 3 வருடம் இருந்தார் எனவும் அறிந்தேன். அதிகாலை 3 மணிக்கு 6 வெவ்வேறு மோட்டர் படகில் சென்று மாபெரும் வலையை விரித்ததாகவும், இன்னும் உண்ணவில்லை என்றும் கூறினார்.
அவரிடம் பேசப்பேச மனசு கனத்து கொண்டே போனது. இங்கு ரெண்டு வருடம் வேலை செய்வதாகவும் தன் முதலாளி அவ்வளவாக தொழிலாளர் மீது அக்கரை காட்டுவது இல்லை எனவும் அறிந்தேன். தன் முதலாளி சாப்பாடு வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் மணி 5 ஆகியும் ஆளே காணோம் எனவும் கூறினார். காலையில் இருந்து உண்ணாமல் இவர்களின் இந்த சுறுசுறுப்பு பிரம்பிப்பைத் தந்தது. நேற்று பௌர்ணமி நாள், அதனால் மீன் சிக்குவது கொஞ்சம் சிரமம் என்றார். பார்ப்போம் என்று பேசிக்கொண்டே வேலை செய்தார்.

இவரில் சம்பளம் 1300 திர்ஹாம்ஸ். உணவு தங்குவது எதுவும் முதலாளி பார்த்துக் கொள்வது இல்லை. எல்லாம் இந்த சம்பளத்தில் பார்த்தாக வேண்டும் என அறிந்தவுடன் தொண்டை அடைத்தது.
சென்ற வாரம் ’லூசியா’ கன்னட படம் ஹேங்கோவரில் வரும் இறுதி எழுத்து என்னை மீண்டும் பாதித்தது. Your small life is someone’s big dream. எவ்வளவு உண்மை என்று மீண்டும் நிருபித்தது.

நான் வாழும் இவ்வாழ்க்கையிலே ஆயிரம் குறைக் கண்டுக்கொண்டு இருக்கிறேன். அவரின் சொற்ப சம்பளத்தில் எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆனந்தம், என்னுடன் பேசும்போது அவரின் பூரிப்பு, எதையும் கடந்து போகும் குணம் என மனுஷன் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்,

வாழ்க்கையில் கற்ற மற்றொரு பாடம்…!!!


இறுதியில் வலை கரையை நெருங்க, சடாரென கிட்டதட்ட 500 பறவைகள் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை, வலையில் இருக்கும் மீன்களை கொத்த வந்தது. கடைசியாக அவர் கூறியது போல வலையில் பெரிதாக ஒன்றும் தேரவில்லை. ஒரு சில கிலோ மீன்களே மிஞ்சியது, எந்த வித ஏமாற்றமும் அவர் மனதில், உடலில் இல்லை. அதே சுறுசுறுப்புடன் தான் காணப்பட்டார். எனக்கு சிறிது ஏமாற்றம் இருப்பினும் மனிதரின் செயல், பேச்சைக்கண்டு மனதில் புது தெம்பு பூத்தது. 






புதன், 23 அக்டோபர், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-3)

முதல் பகுதி படிக்க
இரண்டாம் பகுதி படிக்க

நீண்ட இடைவெளியாகிவிட்டதிற்கு மன்னிக்கவும். ஆபிசில் ஆணியும் ஜாஸ்தி, வீட்டில் அடியும் ஜாஸ்தி... மிடில.... இப்பகுதியை தொடங்கும்முன், என்னை மீண்டும் எழுதத் தூண்டிய நம்ம தல ஹாலிவுட் பாலா அவர்களுக்கும் மன்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நீ எழுதலைன்னு எவன் கேட்டான் என்று கும்ம விரும்புவர்கள், இவர்களை அழைக்கலாம் :) இனி விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்,ஆல் நட்பூஸ். முந்தய பகுதியை படித்துவிட்டு தொடருங்கள் :)

’டொமேட்டோ நாசிக்கந்தர்’ ஹோட்டலின் சிறப்பு ’ரொட்டி டிஸ்யூ’ என்ற ஐட்டம். நம்ம வீச்சு புரோட்டாவை அப்பளம் கணக்காக செய்து, நம்ம ஊர்ல ரோஸ்ட் கொடுப்பாங்கல அதுபோல கூம்பு (cone) வடிவாகச் சுற்றி, அதன் மேல் சர்க்கரை பாகு ஊற்றித் தருகிறார்கள்.. இங்கு வரும் எல்லா வெளிநாட்டவர்களும் சாப்பிடும் முதல் ஐட்டம் இதுவாகத்தான் இருந்தது. எவரைப் பார்த்தாலும் இதுதான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதன்காரணமாகவே அவிங்க டேபிலில் இருக்கும் ஐட்டம் எனக்கும் ஒன்னு வேணும் என ஆர்டர் செய்தேன். சுவை வித்தியாசமா இருக்கும்... செம்ம Crispy. செம்ம டேஸ்ட். எதுவுமே விரும்பி சாப்பிடாத யோகவ், சத்தமே இல்லாமல் உண்டான். இதன் சுவைக்கு  அதுவே சான்று.

Roti Tissue
ஒரு சிறிய தகவல் - அடுத்த நாள் பயணத் திட்டமாக Island Hopping Tour மற்றும் பைக்கில் பிற இடங்களைக் காண என முடிவு செய்தோம். நாங்கள் ஹோட்டலில் சாப்பிடும்போதே 'Island Hopping Tour'க்காக முன்பதிவு செய்துக்கொண்டோம். இங்கு வேலை பார்க்கும் சர்வர்களின் சைட் பிசினஸ், சாப்பிட வரும் டூரிஸ்ட்களுக்கு சுற்றிக் காட்ட ஏற்பாடு செய்வதே. (அதாவது நம்மளை ஏதாவது ஒரு டூரிஸ்ட் ஆப்பரேட்டர்களிடம் கோர்த்து விடுவது.) ஒரு ஆளுக்கு 30 வெள்ளி என Sharing Basis ல் பேரம் பேசி முடிவானது.

வகுரு நிரம்பியவுடன், மனதில் தெம்பு தானாகவே கூட மீண்டும் ஒரு சிறிய ரைட், இம்முறை புத்திசாலித்தனமாக தெரு விளக்கின் வெளிச்சம் இருக்கும் வரை மட்டும் வண்டியை விட்டோம். அருகில் ஒரு ஷாப்பிங் மாலை கண்டவுடன் அதில் உள்ளே சென்று ஒரு நோட்டம் பார்க்க சென்றோம். வியக்கும் விதமாக பெரிதாக ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் மாலே இல்லை, ஒரு சிறிய காம்பிலக்‌ஷ் என்று தான் சொல்ல வேண்டும். இதை ஊரின் பெரிய மால் என்று வேறு தகவல் சொன்னார்கள். :) :) :)


இப்படியே மணி இரவு பத்தை தாண்ட, பயணக் களைப்பு ஒருபுறமும், அடுத்த நாள் காலை 7 மணிக்கே வண்டி வரும் என்ற எண்ணமும் திகில் கிளப்ப நடையை கட்டினோம் ஹோட்டலுக்கு. சிறிது நேரத்திலேயே என் மனைவியும் குழந்தையும் நல்லா தூங்கிட்டாங்க. எனக்கு அவ்வளவு களைப்பிலும் தூக்கமே இல்ல. காரணம், தங்கியிருந்த ரூமும், பைக்கும்.
இது ரிசார்ட் போல இருப்பதால், பைக்கை வீட்டின் முன்பே நிறுத்திக்கொண்டேன்.

(முன்குறிப்பு - நான் மலேசியா செல்கிறேன் என்றவுடன் என் நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு மலேசியா திகில் திருட்டுக் கதை சொன்னார்கள். ரொம்ப ஜாக்கிரதை, ரோட்டிலேயே திருட்டு கும்பல் ஜாஸ்தி, நடைபாதையில் நடக்கும்போதே மிரட்டி பணம் பறிப்பார்கள் எனவும், உடைமைகள் அனைத்தின் மேல் அதீத கவனம் தேவை எனவும் பலவாறு எச்சரிக்கைகள். போதாக்குறைக்கு மலேசியாவில் சந்தித்த தமிழும் தன் பங்கிற்கு ரெண்டு எச்சரிக்கை ஏவுகணைகள் வீசினார். அதுவரை, நான் ஏற்கனவே சென்ற இடம் என்ற மமதையில் அப்படி ஒன்னும் இருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். இப்பத்தான் ஜர்க்கானேன், மலேசியா குடிமகனே இப்படி சொல்கிறாரே என்று.)

இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி தூக்கம் வரும். நம்ம வாடகை வண்டி வேற அநாதையா வாசலில் இருக்கு. திருட்டு போயிடுமோ? நம்ம ரூமை யாராவது களவாட வந்தால் என்ன செய்வது, ரூமில் இண்டர்காமும் இல்லை. இந்த ரிசார்ட் வேற விலாசமா இருக்கே !!! அவசரத்துக்கு யாரை கூப்பிட....!!! ச்சே, ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கலாம் என என்னை நானே நொந்துக் கொண்டேன். இதன் காரணமாவே தூக்கம் வெகுநேரம் வரவில்லை. தூங்கிய சிறிதுநேரமும், வெடுக் வெடுக்கென்று முழித்து ஜன்னல் வழியா வண்டியையும், யாராவது நடமாட்டம் இருக்கிறதா? என்றும் பார்த்துக்கொள்வேன்.

ஐலேண்ட் ஹோப்பிங் டூர் என்பது, லங்காவியை சுற்றியுள்ள சின்னஞ்சிறு தீவுகளை சுற்றிப் பார்ப்பது, மொத்தம் 5 மணி நேரம். காலை 8 மணிக்கெல்லாம் மோட்டார் படகு கிளம்பிவிடும், ஆகையால் 7.15 மணிக்கு வண்டி பிக்-அப் என்றான் அந்த ஆர்கனைசராக மாறிப்போன சர்வர் :)

விடியற்காலை எழுந்து தயாராகிவிட்டு, யோகவை எழுப்பினால் அசரவில்லை. அவனை உலுக்கியெடுத்து, எல்லோரும் ஒருவழியாக   யூத்தாகி டொமேட்டோ நாசிக்கந்தர் முன்பு பிக்-அப் வண்டிக்காக Punctuality புலியாக 7.00 மணிக்கே போய் நின்றோம். படிக்கும் காலத்தில் கூட இவ்வளவு ஷார்பாக பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்றது இல்லை, அவ்வளவு ஏன்?, துபாயில் ஒரு நாள் கூட வேலைக்கு காலை 8 மணிக்கு முன்பாக ஆஜரானதில்லை. அம்புட்டு ஆர்வம்.

யோகவின் சோர்வை நீக்க ப்ரட் ஆம்லேட் ஊட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று அருகில் இருக்கும் கடையில் நுழைந்தோம். மிகுந்த சோர்வில் எதுவும் உண்ணாமல், தண்ணிர் மட்டும் போதும் என்று பிடிவாதமாக நின்றான். எங்களுக்கு இப்பவே பீதியானது. முதல் நாளே பையன் இப்படி சுருண்டுட்டான் என்று. இனி, எப்படி மீதி 11 நாட்களை கடத்துவது, எல்லாம் Collapse என்று பல்வேறு சிந்தனை.

சுமார் 8.30 மணிக்கு தான் பிக்-அப் வேன் எங்களை அழைத்துக்கொண்டு ஹார்பருக்கு சென்றது. அங்கு எங்க சகப்பயணியாக, சவுதியில் பணிபுரியும் ஒரு மலையாள தம்பதியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும், ஒரு மலேசிய தமிழ் ஹனிமூன் தம்பதியினரும் இணைந்தார்கள்.

 நம் சட்டையில் ஒட்டிக்கொள்ள எல்லோருக்கும் தலா ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார்கள், எதற்கென்றால் படகு ஓட்டுபவர்  நம்மை அடையாளம் கண்டுக் கொள்ளவாம். படகு ஏறியவுடன் தானாகவே ஒரு விதமான சந்தோசம் ஆட்கொள்கிறது. படகு வேகத்தில் செல்ல செல்ல பச்சை நிறமும் ப்ளு நிறமும் கலந்த கடல்நீரும், குளிர்காற்றும், தெறிக்கும் கடல்நீரும் மனதை குதூகல ஆட்டம் போட வைக்கிறது. இரண்டு நாள் தூக்கமின்மையாலும், பயண சோர்வாலும் யோகவ் மிகவும் சோர்ந்து எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தான்.


கடலின் நடுவே சின்னஞ்சிறு குன்றுகள் போல பசுமையான மரங்கள் நிறைந்த காடும், கடலும் ரம்மியமாக காணக்கிடைத்தன. படகு ஓட்டுபவரே டூரிஸ்ட் கைடாக டவுள் ஆக்ட். மோட்டார் படகுப் பயணம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் படகை நிறுத்தி ஒரு மலைக்குன்றை காண்பித்து Pregnant Island என்று கூறினார். என்னவென்றே புரியாமல் மீண்டும் உற்று நோக்கினால், அந்த மலை மேடுகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு நிறைமாத கர்ப்பிணி படுத்த நிலையில் இருப்பது போன்று காட்சியளிக்கிறது.


கூகுலாண்டவர் உதவியால், உங்க பார்வைக்கு
அடுத்து பயணித்தது Dayang Bunting Geoforest Park என்ற இடத்திற்கு. இதன் சிறப்பம்சம், கடல் நடுவே இயற்கையாக உருவான மிகப்பெரிய குளம். பல ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் இருந்த சுண்ணாம்பு கற்கள் நிறைந்த குகை வெடித்து சிதறியதால்  உருவான குளம் என கூறினார் என்னுடன் வந்த மலேசிய தமிழர். மேலும் இக்குளத்தை lake of the Pregnant Maiden' என்றும் அறியப்படுகிறது என விவரித்தார். ஒரு பழங்கதையும் உண்டாம். இக்குளத்தில் குளித்தால், விரைவில் கர்ப்பமாவோம் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அறிந்தேன். :) :) :)

நிறைய படத்தில் பார்த்த இடம் (Dayang Bunting Geoforest Park)
இத்தீவிற்குள் படகு நின்றவுடன், ஒரு மணி நேரத்தில் திரும்ப வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு. படகு கரை ஒதுங்கும் போதே, எங்களை வரவேற்ற முதல் வேற யாரு? நம்ம குரங்குகள் தான். குரங்குகளின் சேட்டை முன்பே அறிவேன், ஆதலால் பிளாஸ்டிக் பொருள், கவர் எதுவும் இல்லாத வண்ணம் பயணப்படக் கூறியிருந்தேன் என் மனைவியிடம்.   இருந்தும் குரங்கை கண்டதும் பதற்றத்தில், தன் கைப்பையையும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அனைவரின் பாஸ்போர்ட் என் 3/4th பேண்டின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். கேமராவை பாதுகாப்பது தான் என்னுடைய முதல் குறிக்கோள்.

இத்தீவில் நிறைய சினிமா பாடல் காட்சிகளை எடுத்துள்ளார்கள். மேலே இருக்கும் படத்தை பாருங்கள்.

என்னுடன் வந்த மலையாளிகளையும் எச்சரித்தேன். கையில் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று. நான் எடுத்துக்கூறியும், கவனக் குறைவால் அந்த மலையாளி குடும்பத்தின் குழந்தையிடம் கேமரா இருந்தது. தரை இறங்கியதும் இதற்காகவே காத்திருந்த ஒரு குரங்கு அதை அபேஸ் செய்தது. விலையுயர்ந்த கேமரா போச்ச்ச்....

ஒரு சில குரங்கு என்றால் சமாளிக்க்லாம், அது அங்கு ராஜாங்கமே நடத்துது, நாம பம்மித்தான் போக வேண்டும். நிறைய குழந்தைகளின் சாக்லேட், பிஸ்கட், பாலிதின் கவர்கள் என அனைத்தும் பறிபோயிக்கொண்டே இருந்தது. செம்ம த்ரில் தான். நாங்கள் லாவகமாக முன்னேறினோம். யோகவ் நிற்கவே மாட்டிறான், ஆகையால் அவனை தூக்கிக்கொண்டும், என் மனைவி என் பின்னால் பதுங்கியும் மெல்ல மெல்ல தீவினுள் சென்றோம்.



சிறிய சிறிய படிகட்டுகள் என போகப்போக செங்குத்தாக மலை ஏற வேண்டும். இதில் யோகவை தூக்கிக் கொண்டும் சென்றதால் நாக்கு தள்ளிருச்சு.


அவ்வளவு சிரமம் கடந்து சென்றால், வாவ் வாவ் வாவ்..!! மிக மிக செழுமையான ஒரு இடம். அனைத்து பகுதியும் மலையால் சூழ்ந்த ஒரு இயற்கையான குளம். கண்கொள்ளாக் காட்சி.




Pregnant Maiden Lake

இன்னும் நிறைய இருக்கு. பதிவு நீள்வதால் ஒரு சிறிய இடைவெளிவிட்டு நாளை தொடர்கிறேன். 

புதன், 4 செப்டம்பர், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-2)

முதல் பகுதி படிக்க


மலேசியாவில் முதல் நாள்

நான் தமிழுடன் சிரித்துப் பேசுகையில் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தார், யாரோ இவரை அடிக்க வருவதைப்போல ஒரு லுக்கில். ஒரு வேளை இவர் மலேசியா தாதாவோ??? என்று கூட யோசித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறார் என்று முதலில் புரியாமல் இருந்தது. அப்பாளிக்கா தான் நம்ம மண்டைக்கு உறைத்தது, அட ஹரிப்பயலே, நீ சிரிக்க ஆரம்பித்தால் ஊரே திரும்பிப் பார்க்கும்படியான சத்தம் வருமே, அதைக் கண்டுதான் மனுஷன் பீதியில் இருக்கார் என்று. பின்பு மனதைத் தேற்றிக்கொண்டு சகஜமாகப் பேசினார்; பழக்கப்பட்டுவிட்டார். வேற வழி :)  ஒரு வழியாகச் சிரித்து முடித்து உள்ளூர் விமான நிலையம் போய்ச் சேரும் போது செக்-இன் கவுண்டர் மூடும் நேரமாகிவிட்டது.

அடித்துப் பிடித்து சினிமா தியேட்டருக்கு ஓடி, முட்டிமோதி ஒரு வழியாக டிக்கெட் வாங்கியவுடன் தான் நமக்கு சுயநினைவு வரும். நம்ம பொருள், உடனிருப்பவர் இருக்கிறார்களா என்று பார்ப்போமே, அதே நிலை தான்.
ஈ-டிக்கெட் எடுத்தவுடன் பார்க்கையில் கையை பிடித்துக்கொண்டிருந்தப் பையனைக் காணவில்லை.

எங்கு தேடுவது இவனை? எங்கு போயிருப்பான்? வேற விமான நுழைவாயில் சென்றுவிட்டால் என்னாவது? நம்மவூட்டு அம்மணிக்கிட்ட மாத்து யார் வாங்குவது? நம்ம மொபைல் நம்பரும் யோகவ்க்கு தெரியாதே?. இது துபாய் போல கிடையாதே, தைரியமாக இருக்க என மனதில் ஓராயிரம் கேள்விகள்... (துபாயில் 3-4 முறை காணாமல் போயுள்ளான், அதனால் முதற்வேலையாக எங்களின் மொபைல் நம்பரை மனப்பாடமாக சொல்லிக் கொடுத்துவிட்டோம். ஒரு வேளை யோகவ் காணமற்போனால், அருகில் இருக்கும் யாருடனும் சென்று அவர்களின் மொபைலில் எங்களை அழைக்கலாம் என்று கற்றுக் கொடுத்துள்ளோம்)

ஒரு சில மணித்துளியில் வயிற்றில் பாலை வார்த்தார் நண்பர் தமிழ். யோகவ் உள்ளே சென்று உங்க அம்மணிக்கிட்டத்தான் நிற்கிறான் பாருங்க என்று. இங்கே ஒரு குறிப்பு - மலேசியாவில் ஏர்-ஏசியா விமான சேவைக்காகவே ஒரு விமான நிலையம் இருக்கிறது என நினைக்கிறேன், எங்கு பார்த்தாலும் ஏர்-ஏசியா விமானமும், ஜேஜேவென்று மக்கள் கூட்டமும் காணலாம். அம்புட்டுச் சலீச்சான விமான டிக்கெட் ஏர்-ஏசியாவில்.

கோலாலம்பூர் - லங்காவி தீவிற்கு செல்ல 60 திர்ஹாம்ஸ் தான் (ஒரு வழி மட்டும்). சுமார் ஒரு மணி நேர பயணத் தூரம். லங்காவி என்பது மலேசியாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவு. இது பூலோகச் சொர்க்கம் என்று அடிச்சு சொல்லலாம். நான் முன்பதிவு செய்த ஹோட்டலின் பெயர் அடினா-இன், இது பெண்டாய் செனாங் (Pentai Cenang) என்ற கடற்கரை ஓரம் அமைந்த பரபரப்பான பகுதி. நிறைய விடுதிகள், ரிஸார்ட்கள், உணவகங்கள், கடற்கரை, சுற்றுலா  ஸ்தலங்கள் என இருக்கும் இடம்.



நாங்கள் லங்காவியில் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இலவசமாக லங்காவி ரோட் மேப் மற்றும் இன்னபிற டூரிஸ்ட் விளம்பரங்கள் தந்தார்கள். (நாம் பினாயில் ஓசி என்றாலே விடமாட்டோம்.  இதை விட்டிருவோமா என்ன..!!!) லங்காவி விமான நிலையத்திலேயே Pre-Paid taxi சர்வீசில் ஹோட்டலுக்கு செல்ல டாக்‌சிக்கான பணத்தைக்  கட்டிவிட்டு, அவர்களிடம் இங்கு வாடகைக்கு கார், டூ வீலர் கிடைக்குமா என விசாரித்தேன். நான் தங்கும் ஹோட்டல் வாசலின் முன்பே இருக்கிறது என்றார்கள்.... அடடே...!!

Hotel Adina-Inn

 ஹோட்டல் கிட்டதட்ட ரிஸார்ட் ஸ்டைலில் இருந்தது. நம் அறையின் முன்பே வாகனத்தை நிறுத்தும் வசதி, ரம்யமான சூழல், இரண்டு டபுள் காட் மெத்தைகளுடன் விசாலமான அறை, இரண்டு நிமிடத்தில் கடற்கரை என அருமையான இடம். ஒரு நாள் அறைக்கான வாடகை 125 வெள்ளிகள். ஒரே ஒரு குறை பின்பு விரிவாக சொல்கிறேன்.
எங்க அம்மணி, பயணக்களைப்பில் உறங்க வேண்டும் என்று அரங்கநாதர் அவதாரம் எடுத்துவிட்டார். நம்ம வாரிசோ, புது இடம் என்பதால், கேள்வி மேல் கேள்விகள்... பீச் எங்கே, இது எந்த இடம்? இனிமேல் நம்ம புது வீடு இதுதானா? மேலும் நிறைய சேட்டைகள். என் முகக் கண்ணாடியை போட்டுக்கொண்டு என்னைப் போல பாவனைச் செய்வது, விதவிதமாகத் தன்னை போட்டோ எடுக்கச் சொல்லி அதகளம் பண்ணிட்டான். வகுறு பகபகவென அலாரம் அடித்ததால் அருகில் இருக்கும் உணவகத்தில் சாப்பிடப் போகலாம் என இருவரும் தமிழ் உணவகமான 'Tomato Nasi Kandar'க்கு சென்றோம். (நான் முன்பே சென்றுள்ளதால் இந்த உணவகத்தின் சுவைப் பற்றி அறிவேன், அதனால் தான் என் தங்கும் இடத்தை இங்கு தேர்வு செய்தேன், ஆயிரம்தான் இருந்தாலும், நமக்கு சோறு தானே முக்கியம்... :) )

என்னைப் போல பாவணை செய்கையில்
குஷி மூடில்
சாப்பிட்டவுடன் அருகில் இருக்கும் கடற்கரையை யோகவ் பார்த்த அதே நேரத்தில், நான் பைக் வாடகைக்கு விடும் கடையை கண்டுவிட்டேன். கடற்கரைக்கு  சென்றதால் ஏகக் குஷியாகி விட்டான். பின்பு எங்க அம்மணியையும் அழைத்துக் கொண்டு சென்று பீச்சில் செம்ம ஆட்டம். 1 மணி மேலாகியும் திரும்பவர மறுத்தான். அவனைச் சமாதானப்படுத்தி பைக் வாங்கலாம் வா என அழைத்துகொண்டு போனோம், தொப்பர தொப்பர நனைந்துக்கொண்டு.

ஒரு நாள் வாடகையாக 25,30,35 வெள்ளி என்றவுடன் எனக்கு ஆச்சர்யம். 25 என்றால் 20,000 கிமீ ஓடியது;  30 வெள்ளிக்கு 10,000 கிமீ.க்கு குறைவான ஓடியது; 35 வெள்ளியென்றால் புத்தம் புதிய வண்டி. யோகவ் ப்ளு கலர் வண்டிதான் வேண்டும் என தீர்மானித்தான். வெறும் 300கிமீ ஓடிய புத்தம் புதிய TVS Scooty போல இருக்கும், ஆனால் செம்ம பிக்-அப் 125CC.

எங்களுக்கு 4 நாட்கள் வண்டி தேவைப்பட்டது. அதற்கு வாடகைப் பணத்தை முன்பே கட்ட வேண்டும் + 50 வெள்ளி வைப்புத்தொகை. வண்டி பன்சரானோலோ, பழுதடைந்தாலோ அழைப்பின் பெயரில் அந்த இடத்திற்கே வந்து மற்றொரு வண்டியை மாற்றித் தருவதாகக் கூறினான்.சும்மா சொல்லக்கூடாது, அட்டகாசமான வண்டி. அதே சமயம், எல்லோருக்கும் தலைக்கவசம் - குழந்தை உட்பட. மூன்று பேரும் ஹெல்மட் அணிந்திக்கொண்டு பயணம் செய்தது ஒரு சுவையான அனுபவமாக இருந்தது.

இது சும்மா போட்டாக்காக, ஹெல்மட் இல்லாமல்
கடைக்காரனே மிகத்தெளிவான சாலையின் வரைப்படம், பார்க்க வேண்டிய இடங்கள், மேலோட்டமாக போகவேண்டிய ஊரின் வழித்தடம் பற்றிய தகவல் குறிப்பு தந்தான். ஒரு Ride போகலாம் என்று வண்டிய விட்டோம், உடனே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டான் .சரியென்று வரைப்படத்தை வைத்து ஓட்ட துவங்கினேன்.

பெரிதாக அவ்வூர் சாலைகள் பற்றி தெரியாது, ஊர்ப்பற்றி தெரியாது, மக்களைப் பற்றி தெரியாது.அங்கு இங்கு என அழைந்து பெட்ரோல் பங்’கை கண்டுப்பிடிப்பதற்கே தாவு தீர்ந்தது. இத்தனைக்கும் ஒரு 5கிமீ தான் பயணித்தோம். சரி, பெட்ரோல்  தான் நிரப்பியாச்சே என்ற மமதையில் ஒரு ரௌண்ட் போகலாம் என சுமார் 15 கிமீ இருக்கும் 'Kuah' என்ற நகரப்பகுதிக்கு வண்டியை  கிளப்பினோம்.

போகும் வழியில் ஒத்த ஆள் கிடையாது, இதில் வண்டிய விரைவாக ஓட்டவும் முடியாத நிலை. எங்க அம்மணி வழிகாட்டுதலில் தான் வண்டியை ஓட்டனும். (அவங்ககிட்ட தான் வரைப்படமே, நான் முதலில் குத்துமதிப்பாக பார்த்துக்கொண்டு  கிளப்பிடுவேன்). சிறிது நேரம் கடக்கையில் இருள் சூழச்சூழ அய்யகோ, நம்மளை திருட்டு கும்பல் தாக்கினால் என்ன செய்வது என்ற பீதியால் வண்டியை நிறுத்தினேன். நடுவில் நிறுத்தி வரைப்படத்தை பார்த்து மாற்று வழியில் எங்க ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினேன். அவ்வாறாக முதல் பிளானே அப்பளமா நொறுங்கிடுச்சு :) :) :)

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக் என்பது கணக்கா வெளியே ஒன்னும் காட்டிக்கொள்ளாமல் வண்டியை ஓட்டினால், அது இன்னும் டெர்ரர் பாதையாக இருக்கு. ஈ காக்கா கூட இல்ல... !! நம்மளை அடிச்சு துவச்சு போட்டாலே நம்ம பாடியை தூக்க ரெண்டு நாள் கழிச்சு தான் வருவாங்க போல. ஒரு விதமான பயம் தொற்றிக்கொண்டது :) :) :). ஒரு புது விதமான அனுபவம், பயத்தினூடே.

ஒரு காரைக் கண்டால் போதும் நமக்கு; அதை விடாமல் முடிந்தவரை துரத்திக்கொண்டு அதன் பின்னாலே சிறிது தூரம் பயணிப்போம். ஆனாலும் வழித்தடம் சேன்ஷே இல்ல..!!! இரண்டு பக்கமும் மலைத்தொடர்கள், பாதாளம் போல ஒரு பக்கம், நல்ல குளிர் காற்று என செம திகில்.பயத்தைப் போக்க எங்க அம்மணியுடன் இப்ப வந்துரும், பக்கம் தான் என பேசிக்கொண்டே எனக்கு நானே தைரியத்தைக் கொடுத்துக்கொண்டு சென்றேன். இதில் நாம் செல்வது சரியான வழிதானா எனக்கூடக் கேட்க ஆளில்லை. :) :) பெண்டாய் செனாங் என்ற போர்ட் கண்டவுடன் அப்பாடா, தப்பிச்சுட்டடா தங்கராசுன்னு பெருமூச்சு வந்தது.

வண்டிய நேரா ’டொமேட்டோ நாசிக்கந்தர்’க்கு செலுத்தி ஆளுக்கு ரெண்டு சிக்கன், மீன், புரோட்டா என ரொப்பியவுடன் மனசாந்தி அடைந்தது, ஆங் மறந்துட்டேன் டிவைன். :) :) :)

இனி வரும் பகுதியாவும், கண்ட இடங்கள் அதன் சிறப்பம்சம் என பகிர்கிறேன். மொக்கையா இருந்தா ரெண்டு புரோட்டா வகுரு முட்ட சாப்பிடுங்க, அல்லாம் சரியாகிடும்....

புதன், 28 ஆகஸ்ட், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-1)

முன் கதை சுருக்கம்..!!!

இங்கு என் மகன் யோகவிற்கு ரெண்டு மாதக் கால கோடை விடுமுறை (ஜீலை மற்றும் ஆகஸ்ட்). அவன் நெம்ப போரடிக்குது என்பதால் ஒரு வார முடுமுறை அவனுடன் செலவழிக்கலாம் என திட்டம். பொதுவாக 10 நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுக்கும் கம்பெனி, இங்கு துபாயில் ரம்ஜான் மாதம் என்பதால் 1 மாத லீவு அதிசியமாக கிடைத்தது. ஒரு வாரம் வீட்டில் இருந்தாலே நம்ம டவுசர் அவுந்திரும், ஒரு மாதம் தாங்காது என எங்காவது வெளியில் அழைத்து செல்லலாம் என்ற திட்டம் உதயமானது.(நம்ம வாய் அப்படி, எதாவது பேசி, என்ர அம்மணிகிட்ட உதை வாங்குவதே பொழப்பா போச்சு)

நம்ம ஊரு கோயமுத்தூருக்கு செல்லலாம் என்ற நினைப்பு வந்தாலே அபிமன்யு கதி தான் மனதில் படமாக ஓடுகிறது. ஒண்டியாவே எங்க அம்மணிகிட்ட சமாளிக்க முடியவில்லை.. உடம்பு முழுவதும் புத்தூர் கட்டு, இதில் ஊரில் என்றால் சக்கர வியூகத்தில் நிராயுதபாணியா நிற்கும் அபிமன்யுவாக நான்.... உள்ளே போக மட்டும் தான் தெரியும் (அபிமன்யு போல), எல்லோரும் ரௌண்டு கட்டி அடிப்பாங்க. பேந்த பேந்த முழித்து முழி பிதுங்கி துபாயில் வந்து காலடி வைக்கும்போது தான், அப்பாடா புழச்சுட்டடா ஹரி என்று மூச்சே விட முடியும்..!!!

இத்தனை வருடம் தவிர்க்க முடியா காரணங்கள் இருந்தது. அம்மா, வீடு வாங்குவது, தம்பியின் திருமணம் என அனைத்து பொறுப்புகளும் முடிந்தவுடன் வாண்டடா போய் மீண்டும் மாட்டுவோமா....??? ஹ்ம்ம்ஹூம்... புழச்சுட்டடா கைப்புள்ள....!!!

வெளிநாடு என்றவுடன் மனதில் தோணிய முதல் ஊர் ஜெர்மனி, உலக புகழ் எழுத்தாளர் மற்றும் நம்ம அன்ணன் ராஜ்சிவா இருக்காரே.. எல்லாம் அவர் பார்த்துக்குவார், நம்ம அம்மா போல பாசத்தை காட்டுவாரே என்ற ஃபீலிங்ஸ் கூடுதல் உந்துதல். ஆனா அயல்நாட்டு சதி, அங்கு செல்ல செலவு கண்ணாபிண்ணா எனவாகும் என்ற அச்சம் நடுமண்டையில் பொளேர் என அடித்தது. மற்றொன்று விசா கெடுபிடிகள்....

சரி நமக்கு தோதான அதே சமயம் நம்ம ஊரு திசையே தெரியா வட இந்தியாவில் இருக்கும் சிம்லா, குளு, மணாலி, டார்ஜ்லிங்,  தாஜ்மகால் என பயணத்திட்டம் போட்டேன்.

நம்ம பவர் என்னவென்று நமக்கு அப்போதான் புரிந்தது. திட்டம் போட்ட அடுத்த நாளே, ஊரே அழியும் வண்ணம் கனமழை, புயல் என சிவபெருமானே பெயர்த்துகொண்டு ஓடுறார்.... நம்ம திட்டத்திற்கே ஊரே அழியுதே, இந்த லட்சனத்தில் நாம அங்கு சென்றால் என்னாவது என்ற இந்திய மக்கள் நலன் கருதி, உலக சாந்தி வேண்டி பயணத்தை ஸ்ரீலங்காவிற்கு மாற்றினேன்.

அங்கு என் துபாய் நண்பர் மூலியமாக விசாரித்தேன். என்னுடன் பணிபுரியும் பெண் ரெண்டொரு நாளில் ஸ்ரீலங்கா செல்வதாகவும், அங்கு சென்றவுடன் தட்பவெப்பம், சூழ்நிலை பற்றி தகவல் தருவதாக சொன்னாள். ரெண்டாவது நாள் என்னுடைய ஈமெயிலில் கதறல் குரல், அப்பெண்ணிடமிருந்து. தயவு செய்து இங்கு வர வேண்டாம், ஊர் பூரா பேய் மழை, எங்கு பார்த்தாலும் வெள்ளம், தண்ணீர் நிரம்பி ஓடும் ரோடுகள் என... இப்பொழுது தான் நானே ஜெர்கானேன். என்னடா இது, நம்மகிட்ட இப்படி ஒரு பவர் இருக்குன்னு இவ்ளோ காலமா தெரியாம போச்சேன்னு :) :) :)

சரியென்று, மனம் தளறாமல் பட்ஜெட்டை சிறிது கூட்டி மலேசியா என முடிவானது. எங்கு போவது, என்ன பயணத்திட்டம் என ஒன்றும் இல்லை. நம்ம ராசி பத்திதான் இப்ப உங்களுக்கே தெரியுமே...!!! அதனால் எதை பற்றியும் விசாரிக்காமல், ஒரே நாளில் விசா எடுத்துவிட்டேன்.

(நான் ஏற்கனவே என் அம்மாவை அழைத்து கொண்டு நான்கு வருடத்திற்கு முன்பு சென்றுள்ளேன். என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும் நினைவுகள் அவை. அவர்கள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள். பிறகு ஒரு வருட இடைவெளியில் காலமாகிவிட்டார்கள்)


 65 திர்ஹாமிற்கு ஒரு விசா கிடைக்கிறது துபாயில்.. விசா ஃபார்மாலிட்டீஸ் ஒன்றும் பெரிசா இல்லை, வெறும் தங்கும் இடம், விமான டிக்கெட், கம்பெனி கிட்ட ஒரு கடிதம் மட்டும் போதும். (காலை விண்ணப்பித்தால் அடுத்த நாளே கிடைக்கிறது)

என் பயணத்திட்டம் 11 நாட்கள். முதல் 4 நாட்கள் லங்காவியிலும், 2 நாட்கள் பினாங்கிலும், மீதி 4 நாட்கள் கோலாலம்பூரில் சுற்றவும் என வரைவு திட்டம். நம்ம முகநூல் மலேசிய நண்பர் ’தமிழ் புகழ் தமிழ்மகனிடம்’ மட்டும் அங்கு வருவதை சொல்லிருந்தேன். ஆனால் எங்கு செல்வது, எந்தந்த இடத்தை பார்ப்பது என்ற விரிவான திட்டமேதும் இல்லை. ஒரு குருட்டு தைரியம் தான்.

ஓமான் ஏர்ஸ்’ என்ற விமானத்தில் 1 Stop-Over ல் புக் செய்தேன். துபாயில் இருந்து மஸ்கட் சென்று, அங்கிருந்து கோலாலம்பூரில் தரையிறங்கும். சுமாராக 9.30 மணி நேர விமான பயணம்.  ஒரு நபருக்கான டிக்கெட் விலை 1,600 திர்ஹாம்ஸ். ஸ்டாப்-ஓவரில் வைட்டிங் வெறும் 45 நிமிடங்களே. நமக்கு மஸ்கட் இறங்கி, அடுத்த பிளைட்டை பிடிக்க சரியாக இருக்கும்....


மிக மிக அருமையான சர்வீஸ். புத்தம் புதிய விமானம். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸை விட சர்வீஸ் அட்டகாசம். பயண நேர முழுதும், ஏதாவது ஒன்னு வந்துகொண்டே இருக்கு.... நமக்கு அதானே முக்கியம்.... டவலில் ஆரம்பிச்சு சாக்லேட், நட்ஸ், டிரிங்ஸ், சாப்பாடு, ஜூஸ், ஸ்னேக்ஸ், மீண்டும் ஜூஸ் என ஏக அமர்க்களம்... ஒவ்வொரு சீட்டின் முன்பும் சின்ன கம்பூட்டர் திரைகள், நாம் படம் பார்த்துக்கொண்டு போக. பயணத்தின் நடுவில் ஒரு சிறிய லெதர் பேக் ஆளுக்கொன்று கொடுத்தார்கள், பாஸ்போர்ட் வைத்துக்கொள்ள. திறந்து பார்த்தால் சிறிய பிரஸ், டூத்பேஸ்ட், கண்களை கட்டி தூங்க கருப்பு துணி (சதிலீலாவதி படத்தில் கமல் போட்டுப்பாரே, அதே தான்), சாக்ஸ் என்று. சத்தியமா இந்த சாக்ஸ் எதற்கு எனக்கு என்றே தெரியவில்லை. என் மனைவி கரேக்டா அதே கேள்வியை கேட்டாள். நாமா தான் தெரியாது என்று சொல்ல மாட்டோமே... :) :) :) பாத்ரூம் செல்லும் போது போட்டுக்கொள்ள இருக்கும் என்றேன். என் மகன் சில விநாடிகளில் அப்பா என்று, காலில் போட்டுக்கொண்டு இது தூங்க என்றான்.... பல்பு பல உடஞ்சு சிதறுச்சு பாருங்க... :) :) :) இப்பவே இப்படியா...


துபாயில் ஜூலை 21 இரவு 7.15 மணிக்கு தொடங்கி 8.20 மஸ்கட் அடைந்தது. 9 மணிக்கு வேறொரு பிளைட்டில் கோலாலம்பீரில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தரையிறங்கும் வரை தூக்கமே இல்லை. பையன் ஏகப்பட்ட கேள்விகள், போதாதென்று திரையில் Tom & Jerry, Ice Age என பல கார்டூன்கள், கேம்ஸ் என மாறி மாறி போட்டுக்கொடுக்க வேண்டும்.


கோலாலம்பூரில் இருந்து லங்காவி தீவிற்கு உள்நாட்டு விமானத்தில் செல்ல வேண்டும். 3 மணி நேர இடைவெளியில் ஏர் ஆசியா விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தேன். அதற்கான விமான நிலையம் ஒரு 30 நிமிடத்தொலைவில் இருந்தது. டிக்கெட் விலை வெறும் 60 திர்ஹாம்கள். (ஒரு வழி மட்டும்)

கோலாலம்பூரில் தமிழை முதன்முதலாக சந்தித்தோம். மனுஷன் அம்புட்டு அடக்கமா பவ்யமா வந்திருந்தார். தென்றல் ஜோதியுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு ஏர்போர்டில் இருக்கும் தமிழ் உணவகத்தில் சாப்பிட சென்றோம்.  கருமம், ஒன்னும் வாய்ல கூட வைக்க முடியல. :( ஆரம்பமே அமர்க்களம் தான் போங்க.

ஆனால் முகநூல் தந்த தமிழ், மனம் முழுவதும் நிறைந்தார்... எங்களுக்கு லோக்கல் மொபைல் நம்பர் வாங்கித் தந்தார். பிறகு அடுத்த உள்நாட்டு விமானத்திற்கு டாக்ஸியில் சென்றோம். தமிழின் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு எங்களுடன் வந்தார். pre-paid Taxi யில் செல்ல 42 மலேசிய ரிங்கிட்டுகள ஆகிற்று. இங்கு தமிழர்கள் எல்லோரும் மலேசிய ரிங்கிட்டை வெள்ளி என்றே அழைக்கிறார்கள்.



 இனிமேல் தான், பயணக் கட்டுரையே தொடங்கும்... அவ்வ்வ்வ் :) :) :)

செவ்வாய், 7 மே, 2013

'The Princess' - புத்தகம் பற்றிய பார்வை (பகுதி-2)

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக்கவும்...!!!

இது வெறும் அரச பரம்பரை பற்றிய நிகழ்வுகளாக இல்லாமல், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றிய பதிவும், அங்கு நிலவிய அரசியல் சூழலும், அந்த நாட்டின் சட்டதிட்டங்களும், ஆதிக்கம் செலுத்தும் மதகுருக்கள் பற்றியும், அங்கு நடந்த சட்ட மீறல்கள் என இப்புத்தகம் நிறைய பேசுகிறது, சுல்தானாவின் மூலமாகவே...

திரைப்படத்தில் வரும் ஃபிலேஷ்பேக் காட்சிகள் போன்று, சிலசமயம் பின்நோக்கி சென்று தன் தோழிகளின் கதைகள், அங்கு நடந்த சம்பவங்கள், சுல்தானாவின் பணியாளர்கள் பற்றிய வாழ்க்கை, தொழிலாளர்களின் நிலைமை, அரச குடும்பத்தின் பகட்டு வாழ்க்கை, ஆடம்பரம், திருமண முறை, என மிக அழகாக இதன் எழுத்தாளர் கோர்த்துள்ளார்... இதன் காரணமாகவே படிக்கும் நமக்கு ஒரு முழு தேசத்தை பற்றி அறிந்துக்கொள்ளும் திருப்தியை கொடுக்கிறது.


இந்த புத்தகம் உலக அளவில் சிறந்த விறபனை செய்த புத்தகங்களில் ஒன்று (International best Seller). நியூ யார்க் டைம்ஸ், பெண் எழுத்தாளர்கள் எழுதிய தலை சிறந்த 500 புத்தகங்களில் இதுவும் ஒன்று. (1300ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் உட்படுத்தப்பட்ட பட்டியலில்)

இனி கதையாக இல்லாமல் சில சம்பவங்களை நான் கூறுகிறேன்.

நாம் அறியும் சில திடுக் செய்திகள்


1. மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்ட ஆடவர்கள். பெண்களுக்கு முற்றிலும் கருத்துரிமை வழங்காத நிலை. அவ்வூர் பெண்கள், ஆண்களின் முன் பேசக்கூட மாட்டார்கள்

2. ஆண்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற சமூக எண்ணம்

3. எந்த ஆடவனும் தாய் சொல்லை தட்ட மாட்டார்கள்

4. வசதி படைத்த பெரும்பாலானோர் 4 மனைவிகளுடன் தான் வாழ்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக பாவிக்க வேண்டும் என குரான் கூறுவதாக அறிகிறேன்.

5. இருப்பினும் மனைவிகளுடன் ஏற்ற தாழ்வுகள் நிறைய உண்டு.

6. சுழற்சி முறையில் தினமும் ஒரு மனைவி வீட்டிற்கு செல்ல வேண்டும். இன்று முதல் மனைவி, நாளை இரண்டாவது மனைவி என வரிசையாக. இருப்பினும் இளைய மனைவியுடன் சிலர் பெரும்பொழுதை கழிக்கிறார்கள். ஆனால் ஆடவனை எதிர்த்து கேட்க யாருக்கும் துணுவு இல்லை.

7. பெண்களை வெறும் பிள்ளை பெறும் மிஷின்களாக எண்ணுவது

8. அங்கும் மாமியார், மருமகள் பேதம் இருப்பதாக அறிகிறோம். இது சர்வதேச பிரச்ச்னை போல :) :)

9. பெண்கள் பூப்பெய்தவுடன், அபயா எனும் பர்தா போட்டுக்கொள்கிறார்கள், நம்மூரில் தாவணி அணுவது போல. அதில் பல வேலைப்பாடுகள், மாறுபாடுகள் இருப்பது படிக்கையில் ஆச்சர்யம் அளிக்கிறது.

10.  பெண்கள் எந்நேரமும் அபயா அணிந்துதான் இருக்க வேண்டும். தன் வீட்டில் இருக்கும் சமயத்தை தவிர. அதிலும், உறவினர்கள் வந்தால் அபயா போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்கள் முன்னால் முகத்தை எக்காரணம் கொண்டும் காட்டக்கூடாது என கட்டுப்பாட்டுடன் வளர்க்கிறார்கள்


 11. வீட்டு ஆண்களின் (தந்தை அல்லது கணவர்) அனுமதி இல்லாமல், பயணம் செய்ய இயலாது.

12. பாஸ்போர்ட் போன்ற ஆவனங்கள் ஆடவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஆண்கள் துணையில்லாமல் பயணிப்பது கடினம். அவ்வாறு இல்லாமல் பயணிக்க நேர்ந்தால், அவர்களிடம் No Objection கடிதம் வாங்கி ஏர்போர்டில் சமர்பிக்க வேண்டும்

13.  பெண்கள் வண்டியோட்ட தடை. குடும்ப தலைவரின் நம்பிக்கையான டிரைவர்கள் மூலமாகத்தான் செல்ல வேண்டும் அல்லது குடும்பத்தின் ஆணுடன் தான் செல்ல வேண்டும்.

14. கல்வி என்பது பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது. இருப்பினும்  அரச பரம்பரையில் இருப்போருக்கு தனி ஆசிரியர் மூலமாக அடிப்படை கல்வி அளிக்க சவுதி அரசரின் மனைவியின் நிர்பந்தத்தின் காரணமாக பயன் கிடைக்கிறது

15.  பெண்கள் எந்நேரமும் கணவனின் ஆசையை பூர்த்தி செய்பவளாக இருக்க வேண்டும்

16.  ஆண்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் தன் மனைவியை டைவர்ஸ் செய்யலாம். அவ்வுரிமை பெண்களுக்கு இல்லை... நிறைய நடைமுறைகள், விதிமுறைகள் இருக்கின்றது

17. முட்டாவாஸ் (Mutawas) எனும் மதகுருக்கள் மிகுந்த சக்தி படைத்தவர்களாக திகழ்கிறார்கள்.

18. மதகுருக்கள் தான் தீர்ப்பும் வழங்குகிறார்கள். தங்களுக்கென ஒரு கலாச்சார குழு பாதுகாவலர்களை கொண்டுள்ளார்கள். அங்கு நடைபெறும் கலாச்சாரத்தின் மீறல்களை தடுக்க.

19. அரசனே மதகுருக்களை கண்டு அஞ்சும் நிலை நீடிக்கிறது

20. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என அவர்கள் சமூகத்தில் இருக்கிறது

21. புனித நூல் குரானின் சில கருத்துகளை தவறாக புரிந்துக்கொண்டவர்களாக, ஆணாதிக்கத்தின் உச்சம் பெற்றவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள் என சுல்தானா கூறுவதில் அறிகிறோம்.

22. ஆண்கள் தனக்கு 20-50 பிள்ளைகள் இருந்தால் அது தங்களின் கௌரவத்தின் சின்னம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.

23. குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

24. பூப்பெய்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிடுகிறது.

25. 50 வயதோ அல்லது 60 வயதோ உடைய ஆண்கள், சர்வ சாதாரணமாக 16 வயது பெண்களை மூன்றாம் தாரமாகவோ நான்காம் தாரமாகவோ மணமுடிக்கிறார்கள்

26.இன்னும் நிறைய இருக்கு. புத்தகத்தை படித்தால் பலப்பல அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறது.

முரண்கள்

1. என்ன தான் சட்டம், ஒழுங்கு அனைவருக்கும் சமம் என கூறினாலும், அதிகாரம் பொருந்திய அரச குடும்பத்தினர் இதில் இருந்து எளிதில் தப்பிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, அமேரிக்காவில் படித்த ஒரு இளவரசர், சவுதி சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் மேற்கு வாழ்க்கையின் முறையில் ஈர்க்கப்பட்டு, அடங்க மறுக்கிறார். மதுபானத்தை தன் சொந்த நாட்டுக்கு கடத்தி தொழில் செய்கிறார். அவ்வாறான ஒரு சமயம், மதகுருக்களிடம் மாட்டிக்கொள்கிறது இவருக்கு சொந்தமான வண்டி. நடவடிக்கை என்று பார்த்தால், மிகக்கடுமையாக இருக்க வேண்டும். அரச பரம்பரையின் குறுக்கீட்டால் தண்டனை ஏதும் இல்லாமல்,கமுக்கமாக விஷயத்தை அமுக்கி பக்கத்து ஊருக்கு கட்டிட காண்டிராக்ட் செய்யும் தொழில் அமைத்து அதில் வாழ வழிவகை செய்கின்றனர்.இது போல் நிறைய சம்பவங்கள் இதில் இடம் பெறுகிறது

2. மதுவகைகள் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று. மது அருந்துவது ஒரு பெரிய குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சுல்தானா கூறுகையில், அவர்களுக்கிடையேயான விருந்தில் விலை உயர்ந்த மதுவகைகள் இல்லாத பார்ட்டிகள் மிக அறிது என்கிறார்.

3. எந்த வழக்காக இருந்தாலும், ஆண்கள் சொல்லும் சாட்சியம் தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அதனால் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்களை எளிதாக குற்றவாளியாக்குகிறார்கள்.

உதாரண சம்பவம் - சுல்தானா பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் இருக்கையில், பக்கத்து அறையில் ஒரு பெண் சகல போலீசோடு அட்மிட் செய்யப்படுகிறாள். ஏதேனும் அரச குடும்பத்தினரா என விசாரிக்கையில் அவள் ஒரு கைதி, குழந்தை பெற்ற பின் அவளை நேரே ரோட்டிற்கு சென்று கல்லால் அடித்து கொள்ளும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சுல்தானா அவள் கதையை அறிகிறாள். வெறும் 16 வயதைக் கடந்த பெண் அவள்...

அவளின் சகோதரன், தன் பெற்றோர் இல்லாத சமயத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு இரவு விருந்து அளிக்கையில் பாட்டின் சத்தம் தாங்கிக் கொள்ள முடியாமல், கீழே சென்று அதை குறைக்க முறையிடுகிறாள். நண்பர்கள் அனைவரும் செம போதையில் இருக்கையில் இவலை சின்னா பின்னப்படுத்துகிறார்கள்... சகோதரன், பாத்ரூம் சென்றிருக்கையில் நடக்கும் சம்பவம்... இவள் எவ்வளவு முறையிட்டும், மதுவின் காரணமாக அவர்கள் கேட்கவில்லை. இவளின் கதறல் சத்தம், ஸ்பீக்கரின் சத்தத்தால் வெளியில் கேட்கவில்லை. சகோதரன் போதை தெளிந்து பார்க்கையில் தன் தங்கையின் நிலையை காணுகிறான். விபரீததை உணர்ந்த அவன், மது விருந்து விஷயத்தில் இருந்து தப்பிக்க நண்பர்களின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். இப்பெண் தங்களை செக்‌ஷிற்கு தூண்டியதாகவும், வேண்டாம் என்று ஒதுங்கையில் விடாமல் தங்களை டீஸ் செய்ததாகவும் மதகுருக்களுடமும், பெற்றோர்களிடமும் கூறுகிறார்கள்.... இந்த சாட்சியத்தை ஏற்று இவளுக்கு கல்லடிப்பட்டு சாகும் தண்டனை வழங்குகிறார்கள்..குழந்தை ஈன்ற சில மணித்திளியில் கொடூரமாக சாகிறாள், ஒன்னும் செய்யாத அறியா பொண்ணு.

4. தாயை போற்றினாலும், பெண்களுக்கான அநீதி அதிகம் நடக்கும் ஊர். ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாட்டில் இருந்து செக்ஸ் கொத்தடிமைகளை, வீட்டு வேலை வாங்கி தருவதாக பொய் சொல்லி வர வைக்கிறார்கள்.அவ்வாறான ஒரு பணிப்பெண்ணின் தோழியின் கதை கண்ணீர் வரவழைக்கிறது. இருண்ட அரையில் அடைத்து, அவர்கள் வேண்டும் பொழுது இன்பத்தை அனுபவித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

5. நிறைய ஆண்கள், வெளியூர் பயணம் அடிக்கடி செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் அங்கு கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் அனுபவிக்கவே பெரும்பாலும் செல்கிறார்கள். ஆனால் அவர்களே உள்ளூரில் கடுமையாக நடந்துக்கொள்கிறார்கள். பணம் இருந்தால் அனைத்தும் சாத்தியம் என்ற எண்ணம் சிலருக்கு உண்டு.

இது சில சம்பவங்களே.. உங்க ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை. படிக்க சுவாரஸ்யம் குறைந்து போகுமாதலால் இங்கு விரிவாக சொல்லவில்லை.

சுல்தானா வாழ்க்கை சுருக்கமாக

 சுல்தானா குழந்தை பருவத்தில் தந்தை பாசத்திற்கு ஏங்குகிறார். தந்தைமார்கள், ஆண் பிள்ளைகளை தான் கொஞ்சுகிறார்கள். இதன் காரணமாக தன் மூத்த சகோதரனை வெறுக்கும் நிலை வருகிறது. மூத்த சகோதரனும் மூர்கமாக வளர்கிறான். பெண்களை பற்றி கீழ்தரமான எண்ணங்களோடு.

சுல்தானாவின் அக்கா சாராவிற்கு 53 வயதான நபருடன் திருமணம் நடைபெறுகிறது. அதில் திருமண சம்பர்தாயங்கள், பெண்ணிற்கு இளைக்கப்படும் அநீதி என அனைத்தும் இடம்பெறுகிறது. சில காலத்தில் தற்கொலைக்கு முயன்று மீட்கப்படுகிறாள். அவள் கணவன் மிகவும் செக்ஸ் டார்சர் கொடுத்தபடியால் இந்த விபரீத முடிவு. சில்தானாவின் அம்மாவின் பிடிவாதத்தின் காரணமாக தன் அக்கா மீட்கப்படுகிறாள். பின்பு அவள் கணவர் விவாகரத்து செய்து விடுகிறார்.

சுல்தானாவின் மனதில் திருமணம் பற்றிய அச்சங்கள் ஆழ்மனதில் தொற்றிக்கொள்கிறது. திருமண வீட்டார் காண வருகையில் அடங்காபிடாரியாக நடந்துக்கொள்கிறார். ஒரு இனிய திருப்பமாக கல்யாணத்திற்கு முன்பாகவே கணவருடன் பேசும் பாக்கியம் பெறுகிறார். ஆச்சர்யமாக சுல்தானாவிற்கு அவரை பிடித்துவிடுகிறது. நன்கு படித்த, பெண்களை புரிந்து நடக்கக்கூடிய நபராக இருக்கிறார் (பெயர் கரீம்). 16ஆம் வயதில் தன் விருப்பப்படியே நல்ல இளம் கணவர் கரீமுடன் (27 வயது) கைக்கோர்கிறார்.

மாமியாரை அவமானப்படுத்தியதை மனதில் வைத்துக்கொண்டு அவர் பழி வாங்க நினைக்கிறார். மாமியார் மருமகள் சண்டை அரங்கேறுகிறது. சிலப்பல சண்டைக்கிடையே கர்பமாகிறாள். வாழ்க்கை நன்று செல்கிறது. கரீமுடன் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்கிறாள். இவர்களுக்கு ஒரு பையனும், ரெண்டு பெண் குழந்தைகளும் பிறக்கிறது.

இடையில் மார்பக புற்றுநோய் தாக்க,  இதற்கும் தகுந்த சிகிச்சை பெற்று குணமாகிறாள். ஆனால் பிள்ளை பேறு பெற இயலாது என மருத்துவர்கள் கூறிவிடுவதன் காரணமாக....அவள் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் வாழ்க்கை தடம் புரள்கிறது.

அதை எப்படி சமாளித்தாள், அவள் செய்த காரியங்கள் அனைத்தும் விறுவிறுப்பான திரைப்படத்திற்கு ஒப்பானவை.

இதனூடே தன் அக்கா சாராவின் வாழ்க்கையில் அடிக்கும் வசந்தம், அவர்கள் காதல், பிள்ளை பெறுகையில் இருக்கும் ஆடம்பரம் என சுவையான ஒரு புத்தகம்....

இன்றைய சவுதியின் நிலையும், சுல்தானாவின் நிலை அறியவும
 இப்புத்தகம் பதிப்பித்து ஒரு 20 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது சுல்தானா நலமாக இருக்கிறாளா? அவளுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டின் மூலமாக தன் வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் இருந்ததா? தற்பொழுது சவுதியில் நிலைமை மாறியிருக்கிறதா? சுல்தானா தரும் விவரங்கள் மிக துள்ளியமனவை. எளிதில் குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காண முடியும், அதனால் தற்பொழுது அவளின் கதி என சில கேள்விகளை முன் வைத்து ஜீன் சேசனிடம் கேட்டேன். அவரின் பதில்கள் கீழே...

Hi Hari, Thanks for telling me this… I’m so glad that the true story of a Saudi princess is informative and has put you to thinking about the lives of women behind the veil.

Saudi Arabia is changing but certainly not fast enough. The truth is this: A Saudi woman can have a good life If the men in her family are kindhearted and caring about females. I know Saudi women who live absolutely good lives — they are educated and pursuing many good things. On the other hand, I hear true stories of young girls and women who are suffering terribly because the men of the family are still very backward in their thoughts. It’s a world filled with contradictions with some women being educated and working and fulfilling their dreams and other women are being abused and even murdered by the men in their family.

Yes, her immediate family knows who she is — you can read the full story in the sequel to PRINCESS (there are three books about Princess Sultana and her family & friends. ALl should be available a the bookstores in Dubai).

I hope this answers your questions and feel free to write to me anytime. Thank you, again…. Jean
--------------------------------------------------------------------------------------------------