செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

யோகவும் நானும்...!

அல்-எய்ன்  பயணம் - Al-Ain Trip

யோகவுக்காக போட்ட விடுமுறையின் நிறைவாக, கடந்த வெள்ளிக்கிழமை எங்காவது சற்று தூரமாக சென்று வரலாம் என எங்க குடும்ப நண்பர் முகுந்தன் சார் கூட சேர்ந்து முடிவு செய்தோம். ஏன்னா, அவர்கிட்ட தான் வண்டி இருக்கு... :) :) :) 

நம்மகிட்ட வண்டியேது???. எல்லாம் நண்பர்களின் உதவியினால் தான், சகல இடங்களுக்கும் சென்று வந்துள்ளோம் :) 

அல்-எயின் போய் பார்க்கலாம் என முடிவானது. அல்-எயின் என்பது துபாயில் இருந்து சுமார் 100கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அமீரகத்தின் Garden City. நிறைந்த மரங்களால் சூழப்பட்ட நகரம். அங்கங்கே விவசாயமும் நிறைய இருக்கும். குளிரூட்டப்பட்ட இண்டோர் விவசாய முறை. இந்நகரின் சிறப்பம்சம் என நிறைய இருக்கிறது.

அதில் பிரசித்தி பெற்றது Zoo. அமீரகத்தின் மிகப்பெரிய விளங்கியல் பூங்கா. வெள்ளை சிங்கம், வெண்புலி, பென்குயின் என அரிய வகைகளும் காண இயலும். வெயிலின் காரணத்தால், அதிக நேரம் வெட்ட வெயிலில் சுற்ற முடியாததால், குளிர் கால டிரிப்பாக இருக்கட்டும் என அட்வான்ச் புக்கிங்ல ஒத்தி வெச்சிட்டோம்.

இங்கு தற்சமயம் வெயில் நம் டிக்கியை பஞ்சராக்குவதால்மதியம் மூணு
ணிக்கு தான் வீட்டிலிருந்து புறப்பட்டோம்.

முதலில் hili archaeological park சென்றோம். மொட்ட வெயிலில், பார்க்கின் வாட்ச்மேன் தவிர ஒருத்தரும் இல்லை. மிகப்பெரிய பூங்கா,குளிர்காலத்தில் வார இறுதியில் பொழுதுபோக்க நல்ல அருமையான இடம்இதன் சிறப்பு UNESCO world heritage site. உலக பாரம்பரிய இடங்களில் ஒன்று.2000-2500 BC ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கு வாழ்ந்த தடையங்கள் இருக்கும் இடம். பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள்

புகைப்படங்களை பாருங்கள்.
UNESCO WORLD HERITAGE 
அந்த காலத்து சமாதி (2000-2500 BC )





அடுத்து, அல்-அய்ன் ஒயாசிஸ் என்ற ஈச்சமர தோட்டங்கள் நிரம்பிய பாலைவன சோலை. இது மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது
பெரிய நிலப்பரப்பு - அதனால் காரிலேயே போகலாம்
நாங்கள் வண்டியை பார்க் செய்து நடக்க எத்தனிக்கையில், ஒரு தமிழ் குரல். சார், காரிலேயே போங்கள் என்று. யாரென்று பார்த்தால், அதன் வாட்ச் மேன், இலங்கை தமிழர். நாங்கள் பேசுவதறிந்து, தமிழில் பேசினார்.

பல வகையான பேரிச்சம் பழம்

மற்றொரு வகை
இவ்வாறு கிட்டதட்ட நூறு வகை இருக்கு

அற்புதமான இடம். அமீரகத்தில் உள்ள பலரும் கூட அறியாத இடம் இது. பேரிச்சம் பழங்கள், கிட்டதட்ட நூறு வகைக்கும் மேல இருக்கும் தோட்டம் என நினைக்கிறேன்.

காரில் சிறிது சென்று ஓரமாக நிறுத்திவிட்டு, தோட்டத்தின் உள் நுழைவோம். அனைத்தும் பழுத்து உண்ண எங்களுக்காக காத்திருந்தது போல :). ஒன்னைக்கூட விடலை. எத்தனை ருசி... அட அட அட... சூப்பர்...

இன்னொரு விஷயம், நம் ஊரில் இருப்பது போல வாய்க்கால் வழி தண்ணீர் தான் தோட்டம் முழுவதற்கும். மேலும் மற்றொரு அதிசயம், இத்தண்ணீர், நம்மூரில் இருப்பது போல போர்வெல் தண்ணீர், நம்ப முடிகிறதா! பாலைவன நிலத்தில் நிலத்தடி தண்ணீர்... உண்மையான பாலைவனத்தின் சோலை...!
வாய்க்கால்

மரத்தில் நார்த்தங்காய் பறிக்குறாங்க


வாய்க்காலில் விளையாட்டு யோகவ்விற்கு
அடுத்து, அங்கிருந்து ஜபல் ஹஃபீத் எனும் அமீரகத்தின் மலை உச்சிக்கு சென்றோம். இது கிட்டதட்ட நம்ம மருதமலை உச்சி போலவும், பழனி கோவில் உச்சி போல நினைத்துக் கொள்ளுங்கள். வண்டியில் வளைவுகளில் போக சூப்பரா இருக்கும்.

Jabel Hafeet - View of Al Ain City from mountain




குளிர்காலத்தில் சென்றால், மூடுபனி நம்மளை படர்ந்து, பற்கள் டேன்ஸாட போயிடும் :). இன்றோ, சூடு ஓட ஓட்டம் விரட்டுது. முடிந்து கீழே அடிவாரத்தில் வெந்நீரூற்று இருக்கும். அங்கு சென்றோம். இது அனைத்தும் இயற்கையின் விந்தை. அங்கு எக்கசக்க கூட்டம்.

கொண்டு போன சோத்துமூட்டையை அவிழ்த்து சாப்பிட்டால், ஹாட் பாக்ஸ்ல வைத்தது போல சூடாவே இருந்தது.

அருமையான டிரிப் :)

புதன், 15 ஜனவரி, 2014

வாழ்க்கையில் கற்ற மற்றொரு பாடம்…!!! - Your small life is someone’s big dream



நேற்று எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமொன்று நடந்தது. இதே (துபாயில்) அமீரகத்தில் வாழும் நாம் அறியா ஒரு மனிதனின் இருண்ட பகுதியை அறிய நேரிட்டது. ஆடு ஜீவிதம் கதையில் வந்த உண்மை சம்பவம் போல.  அதை பற்றியதொரு பதிவு.

பொதுவாக துபாயில் வந்து பணிபுரிபவர்களை எப்படியெல்லாமோ நினைக்கும் நிலையில் வேறொரு வாழ்க்கையை வாழும் ஒருவரைச் சந்தித்தேன். நம் நாட்டில் உள்ள மக்கள் ஏனையபேர் துபாய் என்றாலே ஆடம்பரம், பணக்கார மக்கள், ஊர், துபாயில் பணம் காய்க்கும் மரம் இருக்கும் என்ற நினைப்பு தான் வரும்... :)

நேற்றைய நாள் ஆணிப்புடுங்க புஜேரா செல்ல நேர்ந்தது. ஃபுஜேரா செல்வது என்றாலே நயந்தாராவை பார்க்க போவது போல ஒரு கொண்டாட்டம் நமக்கு. நிற்க - எங்கூட்டு அம்மணி, மற்றும் தாய்குலங்கள் ஃபுஜேரா செல்வது என்றாலே மனதில் என்னமோ ஊட்டி செல்வது போன்ற குதூகலம் வந்துவிடுகிறது என வாசிக்கவும். நானும் நல்லவனுங் :) :) இது சத்தியமுங் அம்மணி....

காரணம் காரில் செல்லும் வழி, செம்ம அட்வென்சரா இருக்கும். துபாயில் இருந்து 3 மணி நேர பயண தூரம். பாலைவனம், மலைகள், கொண்டூசி வளைவுகள், பள்ளத்தாக்கு போன்ற மலைகளின் ஊடே செல்லும் வழித்தடம். அவ்வாறு கடந்து சென்றால் நம் பாண்டிச்சேரியை போல ஒரு பக்கம் முழுவதும் கடலும், மற்றொரு பக்கம் ஊரும் இருப்பது இதன் சிறப்பு.

என் வேலை, மீட்டிங், மெஷெர்மண்ட் செக் செய்வது, அளப்பது என எல்லாம் முடிந்து 4 மணியளவில் என்னுடன் வந்த அலுவலக நண்பருடன் சாப்பிட புறப்பட்டோம். கொலைப்பசியில் இருந்ததால் எங்கே வகுத்த நிரப்பலாம் என்ற அயின்ஸீன் கொஸ்டீன் எழுந்தவுடன், கடற்கரை ஒட்டி அமைந்த ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம் என்ற என் நீண்ட நாள் ஆசைக்கு மூடுவிழா எடுத்தோம். 20கி.மி.ல் இருக்கும் கொர்ஃபக்கான் என்ற இடத்தில் பீச் ஒட்டிய .கோல்டன் ஃபோர்க் என்ற அருமையான உணவகம் போய்ச் சேர்ந்தோம்.

கம்பெனிக் காசில் திணிசு திணிசா ஆர்டர் செய்துவிட்டு (ஓசின்னா பெனாயிலே குடிப்போம், விட்டிருவோமா என்ன JJJ) கடலை காணும்போது மனசில் அவ்வளவு ஒரு இனம்புரியா சந்தோஷம் தாண்டவமாடியது. இமாலய சரக்கு கப்பல் வருவதும், பாட்ஜ் படகு வழி நடத்துவதும், நிறைய மீன்பிடி படகுகள் செல்வதும் என பார்த்துக் கொண்டே உணவருந்தினேன். அதில் ஒரு இடத்தில் மீன் பிடிக்கும் முறையில் இருந்த செய்முறை வித்தியாசம், அதிக ஆர்வத்தைக் கொடுத்தது. வைத்த கண் வாங்காமல் அங்கே பார்க்க நேரிட்டது.

சாப்பிட்டப் பின், ஆர்வமிகுதினாலும் வகுரு நிரம்பியதாலும் ரிலாக்ஸாக அருகில் சென்று பார்த்தோம். சுமார் 750 மீட்டர் (முக்கா கிலோமீட்டர்) சுற்றளவு கொண்ட ராட்ஷச மீன்வலையை கடலில் விரித்து வைத்திருந்தார்கள். அவ்வலையை கரைக்கு இழுக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள்.

வலையின் இருமுனையும் (இரண்டு பக்கமும்) 4x4 பிக்-அப் காரைக் கொண்டு ரிவெர்ஸாக ஓட்டி கயிற்றை இழுக்கிறார்கள். அந்த பிக்-அப் ஜீப் முன்னும் பின்னும் சென்று மீதி வலையை கரைப்பகுதிக்கு கொண்டுவர செய்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டி ஓட்ட ஒருத்தர், மீன்பிடி கயிற்றை வண்டியில் கட்டவும், ரிவெர்ஸ் போய் வந்தவுடன் கயிற்றை அவிழ்க்கவும் மீண்டும் கட்டவும் என ஒருத்தர்,  இழுத்த கயிர்றை சுருட்டி வைக்க ஒருவர் என மூவர் டீம் ஒரு முனையில். இதே போன்றொரு டீம் மறுமுனையும்,இதே வேலையை கோர்வையாக இழுக்கிறார்கள். சுறுசுறுப்பு என்றால் அப்படி ஒரு சுறுசுறுப்பு. (நம்மூரில் ஏலேலோ ஐலசா என்று நிறைய மனிதர்கள் ஒன்றாக இழுப்பார்களே, அவ்வேலையை இவ்வாறு செய்கிறார்கள். சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலையில் பெரிய திமிங்கலம் மாட்டிகிச்சு என்று இழுப்பார்களே… இந்த பல்லே பல லட்சம் போகும், அதன் தோல் 1 கோடிக்கு மேல போகும் என்று அடிச்சு விடுவார்களே அதே தான்…)

அந்த மூவர் அணியில் இருக்கும் ஒரு மலையாளியிடம் பேச்சுக் கொடுத்தேன். மனிதருக்கு 50 வயது இருக்கும். மனுஷன் என்னமா உழைக்கிறார்!!! மொத்த வலையையும் கடற்கரைக்கு கொண்டு வர இன்னும் எவ்வளவு நேரமாகும், என கேட்டவுடன், இன்னும் 1 மணிக்கு மேலாகும் என்றார். இந்த வலையில் அகப்படும் மீன்கள் சுமார் 6 வண்டி நிறையும் என்றார். தோராயமாக 30,000 திர்ஹாம்ஸ் கூட போகும் என்றார். மனதில் இருந்த பிரம்மாண்டம் படர்ந்ததால், பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன்.

பேச்சினூடே அவரின் வாழ்க்கையையும், காசிக்கோடு சொந்த ஊர் எனவும், அமீரகத்தில் 16 வருடம் இருக்கிறார் எனவும், சவுதியில் 3 வருடம் இருந்தார் எனவும் அறிந்தேன். அதிகாலை 3 மணிக்கு 6 வெவ்வேறு மோட்டர் படகில் சென்று மாபெரும் வலையை விரித்ததாகவும், இன்னும் உண்ணவில்லை என்றும் கூறினார்.
அவரிடம் பேசப்பேச மனசு கனத்து கொண்டே போனது. இங்கு ரெண்டு வருடம் வேலை செய்வதாகவும் தன் முதலாளி அவ்வளவாக தொழிலாளர் மீது அக்கரை காட்டுவது இல்லை எனவும் அறிந்தேன். தன் முதலாளி சாப்பாடு வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் மணி 5 ஆகியும் ஆளே காணோம் எனவும் கூறினார். காலையில் இருந்து உண்ணாமல் இவர்களின் இந்த சுறுசுறுப்பு பிரம்பிப்பைத் தந்தது. நேற்று பௌர்ணமி நாள், அதனால் மீன் சிக்குவது கொஞ்சம் சிரமம் என்றார். பார்ப்போம் என்று பேசிக்கொண்டே வேலை செய்தார்.

இவரில் சம்பளம் 1300 திர்ஹாம்ஸ். உணவு தங்குவது எதுவும் முதலாளி பார்த்துக் கொள்வது இல்லை. எல்லாம் இந்த சம்பளத்தில் பார்த்தாக வேண்டும் என அறிந்தவுடன் தொண்டை அடைத்தது.
சென்ற வாரம் ’லூசியா’ கன்னட படம் ஹேங்கோவரில் வரும் இறுதி எழுத்து என்னை மீண்டும் பாதித்தது. Your small life is someone’s big dream. எவ்வளவு உண்மை என்று மீண்டும் நிருபித்தது.

நான் வாழும் இவ்வாழ்க்கையிலே ஆயிரம் குறைக் கண்டுக்கொண்டு இருக்கிறேன். அவரின் சொற்ப சம்பளத்தில் எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆனந்தம், என்னுடன் பேசும்போது அவரின் பூரிப்பு, எதையும் கடந்து போகும் குணம் என மனுஷன் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்,

வாழ்க்கையில் கற்ற மற்றொரு பாடம்…!!!


இறுதியில் வலை கரையை நெருங்க, சடாரென கிட்டதட்ட 500 பறவைகள் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை, வலையில் இருக்கும் மீன்களை கொத்த வந்தது. கடைசியாக அவர் கூறியது போல வலையில் பெரிதாக ஒன்றும் தேரவில்லை. ஒரு சில கிலோ மீன்களே மிஞ்சியது, எந்த வித ஏமாற்றமும் அவர் மனதில், உடலில் இல்லை. அதே சுறுசுறுப்புடன் தான் காணப்பட்டார். எனக்கு சிறிது ஏமாற்றம் இருப்பினும் மனிதரின் செயல், பேச்சைக்கண்டு மனதில் புது தெம்பு பூத்தது.