வியாழன், 13 டிசம்பர், 2012

கண்ணா..!!! துபாயில் ஃபிஷ் பிரியாணி திங்க ஆசையா..!!

அரபு தேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்த தலைப்பின் வசீகரம் தெரியும். ஒரு புன்முறுவலோடு அடப்பாவி, எந்த ஆடு சிக்கப்போகுதோ என மனதில் நினைத்துக்கொள்வார்கள்.

ஏன் இந்த தலைப்பு என்று புரியாதவர்களுக்கு, சிறிய விளக்கம் இதோ!

நம் ஊரில் மாமியார் வீட்டிற்கு போகனுமா என்பதை தான் இங்கு ஃபிஷ் பிரியாணி திங்க போறியா என கேட்பது... :) :) :)


 துபாய், சொர்க்க பூமி என்பதில் மாற்று கருத்தேதும் இல்லை. நிறைய சுதந்திரம் நிச்சயம் இருக்கு, அடுத்தவரை சீண்டாத வரையிலும்.  சரி, சட்டுபுட்டுன்னு விஷயத்திற்கு வருவோம். இங்கு இலவசமாக ஃபிஷ் (மீன்) பிரியாணி திங்க ஆசைப்படும் நபர்கள், தவறாமல் செய்ய வேண்டியவைகள் கீழே...!!

குறிப்பு : பின்விளைவுகளுக்கு, என்ற கம்பேனி பொறுப்பல்ல...

1. இங்கு பெண்களே உயர்ந்தவர்கள். அனைத்து ஆண்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆதலால் அவங்களை முதலில் திட்டிவிடுங்கள். உடனே பிரியாணி கேரண்டி

2. ’For Ladies Only' என்று போர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு என்ன இருக்கு என ஆராயலாம்

3. ஒரு ஃபிகரை, பெண்ணை வெறிச்சு பார்த்தா போதும்

4. லிஃப்டில் பெண் தனியாக செல்லும் போது, அதில் நாமும் பயணிக்கலாம். குறிப்பாக அரபி பெண் இருக்கும் லிஃப்ட் என்றால் சாலச்சிறந்தது. :)

5. அரபி பெண்களுடன் முதலில் முந்திரி கொட்டைத்தனமாக கைக்குலுக்குவது, பயன் தரக்கூடும்

6. அரபியை தொட்டு பேசுவது, யாராக இருந்தாலும்... 

7. ரோட்டில் எவன் சட்டையையோ பிடித்து டேய், நீ என்ன பெரிய பாடா என கேட்கலாம்

8. பொதுவில் கிஸ் அடித்தால், நம் மாமன் உடனே வருவான்

9. ச்சே, எப்படி பப்லிக்கில் கிஸ் அடிப்பது என தயக்கம் என்றால், கட்டிப்பிடித்தாலும் விமோச்சனம் உண்டு. குறிப்பு  - உங்க காதலி, மனைவியா இருந்தாலும் டீலிங் இதே தான்

10.  கில்மா மேட்டர் செய்து ஃபிஷ் பிரியாணி ருஷியை அறியலாம். ஆனால், இதற்கு அடுத்த ஆள் போட்டுக்கொடுக்கனும் :) எப்படியும் நாம வாய் திறக்க மாட்டோம்

11. வாய்ல சனி உட்கார்ந்தா பலன் உடனே நிச்சயம். கருத்து கந்தசாமியா மதம்., இவர்களின் உடை, ஷேக் மவராசன், கலாச்சாரம் என நம்ம பிஸ்தை, காட்டலாம்.

12. நம்ம காலை, ஷூவை அவர்களை நோக்கி காட்டலாம். எதேச்சையா காட்டினாலும் பிறவிப்பயன் உண்டு. அவர்களை அவமானம் படுத்திய பெருமைக்கு ரிவார்ட்

13. அரபி இருக்கும் திசையில் நம் ஆவேச குரலில் பேசலாம்.

14. சைகையில் மிரட்டினாலும், நம்ம அண்ணன் விசயகாந்த் போல வாய சுலட்டி சுலட்டி காட்டினாலும், நடுவிரலை காட்டினாலும், ஆண்டவன் அணுகிரகத்தால் பிரியாணி கிட்டும்

15. பெர்முடாஸ் போட்டுக்கொண்டோ அல்லது பெண்கள் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் போட்டுக்கொண்டோ மால்களில் சுத்தலாம்

16. முஸ்லீம் அல்லாதவர்கள், அவர்களின் கோவிலுக்கு (மசூதி) செல்ல முற்படலாம். அல்லது குரான் புத்தகத்தை எடுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம்

17. ரம்ஜான் நோம்பு சமயத்தில், தண்ணீரோ, சிவிங் கம்மோ, அல்லது ஏதேனும் தின்பண்டம் சாப்பிடலாம்

18. இது நமக்கு ஒத்து வராது, இருந்தாலும் துணிந்த நவநாகரீக பெண்களுக்கு...... பீச்சில் டாட்லஸாகவோ, அல்லது பிகினி உடையிலோ ஒரு வாக் போகலாம்

19. முஸ்லீம் ஒருவர் சாமி கும்மிடும் போது, அவரை தாண்டி சென்றோ அல்லது அவர் முன் நின்று வெறிக்க பார்த்தாலும் பயன் கிட்டும்

20. அரபு வீட்டிற்கு போகும் போது, ஷூ காலோடு சென்று நம் ஏழரையை கூட்டிக்கலாம்

21. தண்ணியடித்துவிட்டு ’ஓஓஓஒ’ என நடுரோட்டில் கத்தலாம்

22. இது கஸ்டம் என கருதினால், ஒரு சிறிய சௌண்ட் விட்டால் கூட போதும்

23. அப்புறம் ரொம்ப ஈஸியா நேரா பிரியாணி தான் வேனும் என்றால், ஏர்போர்ட்டில் இருந்து செல்ல கசகசா, வெள்ளை பவுடர் போன்று எதாவது, டாக்டர் ஸ்லிப் இல்லாத மருந்துகள் என கொண்டுவரலாம்.

24. நம் குழந்தையையோ மனைவியையோ ஓங்கி அடித்து, பக்கத்து வீட்டுக்காரன் கூவினாக்கூட பலனை எதிர்பார்க்கலாம்

25. யாராக இருந்தாலும் ஒரு சிறிய ரத்தம் வர மாதிரி சண்டை, சச்சரவுக்கு காரணமாக இருந்தால் போதும்

26. ஜீப்ரா கிராஸிங்கில் ரோட்டை கடக்காமல், தேமே என்று நடுரோட்டில் ரோட் கிராஸ் செய்து நம் புண்ணியத்தை சோதிக்கலாம்

27. நம் குழந்தையை ரோட்டில் தவறவிட்டால் அல்லது எதேச்சையாக நம்மை அறியாமல் அவர்கள் ரோட்டை கடந்தால், பெற்றோருக்கு ஒரு வாரம் கேரண்டி (பேரண்டிங் கிளாஸ் உ ண்டு). unattended child at public place is punishable

28. மது அருந்திவிட்டு காரை தொட்டால், ஃபிஷ் பிரியாணி கேரண்டி

29. மதுவை வீட்டில் வைத்திருந்தாலும் இதே கதி தான்.

30. ஹோம் தியேட்டர் இருக்கே என்று, ஓவர் சௌண்ட் வைத்து பக்கத்து வீட்டுக்காரனை தூங்க விடாமல் செய்யலாம்

31. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட, ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டினால் நம்மை அங்கேயே வந்து அழைத்துச்செல்வார்கள்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கு. இதை நான் ஜாலியாக சொன்னாலும் அனைத்தும் முக்கியமானதே...!!!

மேற்கூறியவையை கனவிலும் இங்கு முயலாதீர்கள். இவை எல்லாம் குற்றமாக கருதப்படுகிறது. நம்ம பொடனிக்கு பின்னாடி நிக்குறவன் மாதிரியே, உடனே வந்துவிடுவார்கள், இங்கு உள்ள காவல்துறையினர். அவர்களின் நேர்மை, சேவை பாரட்டத்தக்கது. அப்பாடா....!!!


இதே போல, புதிதாக வருபவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலைகள், இங்கிருக்கும் மாற்றங்கள்,  நாம் எதிர்கொள்ளூம் சிக்கலகள் என உங்கள் ஆதரவு இருப்பின் தொடர்கிறேன்.

5 கருத்துகள்:

  1. மதுவையும், மாதுவையும் காரில் கட்டிக்கொண்டு செல்வதை விட்டுவிட்டேலே......

    பதிலளிநீக்கு
  2. அதான் சொல்லியாச்சே, தனித்தனியா... :)

    பதிலளிநீக்கு
  3. ரம்ஜான் மாதத்தில் பொது இடத்தில் புகைபிடிப்பது........???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான எழுத்து நடை. என் தம்பி இப்படி அசத்துவது எனக்குப் பெருமைதான். அட்டகாசம் - ராஜ்சிவா

      நீக்கு
    2. ராஜ் சிவா அண்ணே, ஒரு கமெண்ட் மிகுந்த உத்வேகத்தை தரும் அண்ணே...

      நீக்கு