திங்கள், 25 மார்ச், 2013

Paulo Coelho’s Eleven minutes - Novel


போர்சுகல் எழுத்தாளர் பௌலோ கோல்ஹோவின் 'The Alchemist' நாவல் கொடுத்த தைரியத்தால், மீண்டும் ஒரு ஆங்கில நாவல படிக்க உந்தப்பட்டு (Paulo Coelho’s) Eleven minutes என்ற நாவலை படித்தேன். நான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இப்பதிவு. நான் படித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், எழுதுவதில் சிறிய தாமதம். வேறென்ன, நாளை நமதே என்ற நம்ம சோம்பேறித்தனம் தான்..... JJJ



நான் படித்த இவரின் முந்தைய நாவலான ‘ The Alchemist’ ஐ  விட பலமடங்கு வித்தியாசமான களம், எழுத்து நடை. மனுஷன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையில் வல்லவர் போல JJJ. லெவன் மினிட்ஸ்என்ற இந்நாவல் நிச்சயம் 18+ வயதானோருக்கே... சில பகுதிகளில் காதல் ரசம், கொட்டோ கொட்டென கொட்டுகுறது, ஆனால் செம்ம அருமையான வசீகரிக்கும் எழுத்து.

இதன் ஆங்கில மொழிப்பெயர்பாளரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எந்த ஒரு இடத்திலும், நாம் வாசிப்பது ’ஒரு மொழிபெயர்ப்பு நாவல்’ என்பதை நாம் அறிய வாய்ப்பே இல்லை.
இந்நாவலும் கிட்டதட்ட 50 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இன்னும் மொழி பெயர்க்கவில்லை என கூகுளாண்டவர் சொல்லுகிறார்.... !!!
 
நம்முள் ஒரு பாசிடிவ் எண்ணம் தோணும் வண்ணம் இருக்கும் எழுத்து நடை, நம் வாழ்க்கையை எவ்வாறு எதிர் நோக்குகிறோம் என்று நம்மை நாமே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு புத்தகம்.

முக்கிய கதாபாத்திரங்கள்
மரியா - கதையின் நாயகி
ரோஜர் - வெளிநாட்டு (ஸ்விசர்லாந்து) கிளப் ஓனர்; வெளிநாட்டு அழகிகளைதன் கிளப்பிற்கு நடனமாட வேலைக்கு அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டவர்
ஹைதி - வாடகை நூலகத்தின் இருக்கும் நபர்
மிலன் - “Copacabana”பாரின் முதலாளி
நியா - பணியிடத்தில் இருக்கும் மரியாவின் சக தோழி
ரால்ப் ஹர்ட் - ஒரு புகழ்பெற்ற ஓவியன்
டெரன்ஸ் - பணக்கார ஆங்கிலேயன், பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பவன்

கதைச்சுருக்கம்
மரியா என்ற இளம்வயது பிரேசில் பெண், தன் சிறு வயது பால்ய காதலை மனதில் கொண்டு, காதலை முற்றிலுமாக வெறுக்கிறாள். ரோஜர் என்ற தொழிலதிபர் கொடுக்கும் ஆசை வார்த்தைகளில், வெளிநாட்டு வேலை என்ற மாய பிம்பத்தில் சிக்கி, கொத்தடிமை வாழ்க்கையில் சிக்குகிறாள். ஒரு வருடம் முழுவதும் வேலை செய்தாலும், தான் நாடு திரும்ப மட்டுமே பணம் ஈட்ட முடியும் என்ற நிலை. தன் கனவெல்லாம் சுக்குநூறாக உடைகிறது. இருப்பினும், என்னை போல புலம்பி தள்ளாமல், வாழ்க்கையை ஏற்று பாிடிவ்வாக முன்னேறுகிறாள்.

இச்சமயத்தில் தன் சாமர்த்தியத்தால் ரோஜரிடமிருந்து மீண்டு, ஊருக்கு பயணிக்க தீர்மானிக்கையில் விபச்சாரம் தன் வாழ்வில் எதிர்பாரா விதமாக குறுக்கிடுகிறது. வாழ்க்கையில் தோற்ற பிம்பத்துடன் நாட்டுக்கு செல்ல வேண்டுமா என இதில் கிடைக்கும் அதிகப்படியான பணம்  (Easy Money) இவளை யோசிக்க வைக்கிறது. தன் பயணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடுகிறாள்.

மிலன் என்ற நபர் நடத்தும் ‘கோபகபானா’ என்ற இரவு பாரில், நடனமாடவும் விபச்சாரம் செய்யவும் சந்தர்ப்பம் அமைகிறது. இவ்வாறான சூழலில் தன் ஆன்மாவை, தன் மனதை எவ்வாறு பாசிடிவ்வாக வைத்துக்கொள்கிறாள் என்பதில் தான் என்னே ஒரு மேஜிக் எழுத்து நடை. காதலே கூடாது என்று இருப்பவளிடம் காதல் பூகம்பமாக பூக்கிறது, ரால்ப் ஹார்ட் என்ற இளம்ஓவியன் மூலமாக.

இவள் திட்டமிட்டப்படி ஒரு வருடத்தில் நாட்டிற்கு சென்றாளா? அல்லது ஈஸி மனி என்ற வலையில் நிறைந்திரமாக விழுந்தாளா? ரால்ப் ஹார்டுடனான காதல் என்னவானது என்பதே நாவலின் மையம். படிக்க படிக்க ஆர்வமூட்டும் எழுத்துகள்.....

நான் ரசித்த துளிகள்

 * இதன் ஆசிரியர் நினைத்திருந்தாரேயானால் இந்நாவலின் களத்தில் சோகத்தை பிழிய பிழிய கொடுத்திருக்கலாம்.  ஆனால் நாம் எதிர்பார்க்கா வண்ணம், அட்டகாசமான ரசிக்கும் படியான பாத்திரப்படைப்பு, மரியா. 

* லெவன் மினிட்ஸ் பற்றியிளக்கம் நாம் அறியும் இடம், அட்டாசம். என்னால் அை வார்த்ையால் கத்ுடியில்லை.
எல்லாத்தையும் பாசிடிவாக நோக்கும் எண்ணம். செய்யும் தொழிலில் ஒரு தொழில் நேர்த்தி (Professionalism), எதற்காக ஆண்கள் விபச்சாரத்தை நோக்கி வருகிறார்கள் என்ற உளவியல் பார்வை, தொழிலின் நேர்மை, அவளின் மனம் எவ்வாறு சிந்திக்கிறது, அவள் எவ்வாறு உயிர்ப்போடு இருக்கிறாள் என்று அனைத்தும் அருமை..... வாசித்தால் மட்டுமே கிடைக்கும் ஆனந்தம். 

* மரியாவின் சிறு வயது காதல் (Puppy Love) முறிவிற்கான காரணம், அட்டகாசம்... பென்சில் இருக்கா என கேட்டு, பதில் கூறாமல் மியபோவதால் காதல் முறிவு என கூறுவது வாவ்...

* மரியாவின் பதின்பருவத்து காதல், அதிலும் தோல்வியில் முடியும் காரணி நாம் அறியும் இடம் மிகுந்த சுவாரஸ்யமானது. கிஸ் அடிக்கும் போது, வாய் திறக்காமல், பல்லை காட்டியதால் :) :) :) ஹ

* நியா, இவளிடம் சொல்லும் தொழில் நுணுக்கம், தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள டைரி எழுதுவதும் ,அதின் மூலம் நாம் அவளின் மனதை அறியும் யுத்தி ரசிக்க வைத்தது.

* இடையில், அதீத துன்பத்தின் இறுதியில் இன்பம் காண்பது போன்ற சாடிசம் பற்றிய விளக்கங்கள், பண்டைய காலத்து புனித செக்ஸ் பற்றிய குட்டி கதைகள் நம்மை வேறொரு களத்திற்கு இட்டுச்செல்லும். சிலருக்கு மொக்கையா இருக்கும், எனக்கும் தான்....

*ியான் இத்ாள் அடையா இன்பம், டெரன்ஸ் என்பால் அடையம் ுணம், அில் இரந்து மியாவின் எண்ணம் மாறுபும் இடம் அருமை. டெரன்ஸ் என்பவன் பிறரையும், தன்னையும் துன்புறுத்தி உடல் இன்பம் காணும் தன்மை பற்றி விவரிக்கும் இடம், ஒரு கட்டத்திற்கு மேல், துன்பமும் இன்பமாக மாறுகிறது என்ற விளக்கம், என்னை பல்வேறு சிந்திக்க வைத்தது. அதற்கு காரணம், என் நண்பர் ‘செந்தில் முருகன்’ திருச்சந்தூரில் தான் ஒரு முறை அலகு குத்துவதை பற்றிய குறிப்பை வாசித்தது நினைவடுக்கில் வந்தது. ஒரு வலியை விட இன்னொரு அதீத வலி அதை முற்றிலுமாக மறைக்க செய்யும், நம்மை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறி இருப்பார்.

* சோனியா என்ற ஒரு பெண்ணின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு, ஆசிரியரால் எழுதப்பட்ட நாவல்.


* ரால்ப் ஹார்ட்கும், மரியாவிற்கும் இடையில் நடக்கும் காதல், காமம் பற்றிய வர்ணிப்புகள் கவிதை :) :) :)

* கிளைமாக்ஸ், ஒரு தமிழ் படம் கொடுக்கும் உணர்வை கவிதையாக கொடுக்கும்.


* போர்சுகள் கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றுகிறது.(பதின் பருவத்து காதலை விவரிக்கும் இடம், மரியாவின் அறியாமையில் சொல்லும் திரைப்பட காட்சிகள் எல்லாம் நம் சினிமா போலவே இருக்கு)


* நாவலின் முதல் வரியே, Once Upon a time, there lived a Prostitute in a small town என்று அதிரிபுதிரியா தொடங்கும் இடம், அசத்தியது. (குழந்தைகளுக்கு சொல்லும் கதை நடையில், எப்படி ஒரு விபச்சாரி வர முடியும்!!!! என்று தொடங்கும் இடமும், அதற்கு ஆசிரியரே தரும் பதில், At every moment of our lives, we all have one foot in a fairy tale and the other in the abyss.


நான் ரசித்த சில வரிகள்

* When I had nothing to lose, I had everything. When I stopped being who I am, I found myself (மிகவும் பிடித்த வரிகள்)

* I can choose either to be a victim of the world or an adventurer in search of treasure. It's all a question of how I view my life (மிகவும் பிடித்த வரிகள்)

* Everything tells me that I am about to make a wrong decision, but making mistakes is just part of life. What does the world want of me? Does it want me to take no risks, to go back to where I came from because I didn't have the courage to say "yes" to life?”

*  Life moves very fast. It rushes us from heaven to hell in a matter of seconds

* Its best to live as if it were the first and last day of my life

* The true experience of freedom: having the most important thing in the world without owning it

*  No one loses anyone, because no one owns anyone

* Life always waits for some crisis to occur before revealing itself at its most brilliant

* The strongest love is the love that can demonstrate its fragility

* Don't listen to the malicious comments of those friends who, never taking any risks themselves, can only see other people's failures

* I'm not a body with a soul, I'm a soul that has a visible part called the body

* Considering the way the world is, one happy day is almost a miracle

* Sometimes life is very mean: a person can spend days, weeks, months and years without feeling new. Then, when a door opens - a positive avalanche pours in. One moment, you have nothing, the next, you have more than you can cope with

* Dreaming is very pleasant as long as you are not forced to put your dreams into practice

* you only know yourself when you go beyond your limits

* A time to be born, and a time to die;
A time to plant, and a time to pluck up that which is planted;
A time to kill, and a time to heal;
A time to break down, and a time to build up;
A time to weep, and a time to laugh;
A time to mourn, and a time to dance;
a time to cast away stones, and a time to gather stones together;
A time to embrace, and a time to refrain from embracing;
A time to get, and a time to lose;
A time to lose; A time to keep, and a time to cast away;
A time to rend, and a time to sew;
A time to keep silence, and a time to speak;
A time to love, and a time to hate;
A time of war, and a time of peace

இன்னும் இது போல், நிறைய இருக்கு.....

A Salute to Paulo Coelho.


கண்டிப்பா உங்க எல்லோருக்கும் பிடிக்கம் என நினைக்கிறேன். உங்க மேலான கருத்துக்களை தெரியப்படுத்துங்க, நண்பர்களே.....

புதன், 6 மார்ச், 2013

’யோகவும் நானும்’ (Yogev & me)

இத்தலைப்பில் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். எனக்கும் என் மகனுக்கும் இடையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை கோர்த்து தொகுத்தளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.


னால் நாமதான் சோம்பேறியின் முழு ஏஜண்ட் ஆச்சே..... மேலும், எழுத ஆரம்பித்தால் நிறைய உண்மைகள் எழுத வேண்டிவரும், பின்விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்று தான் ஒரு தயக்கம்...??? (இப்போ ஒழுங்கா அட்லீஸ்ட் மூணு வேலை சாப்பாடு கிடைக்குது, அதுக்கும் ஆப்பு தான் JJJ)

அம்மாவுடம் யோகவ் - பிறந்த ஒரு நாளில்
நேற்று இரவு சூர்ய குமாரிடம் பேசுகையில், எதேச்சையாக அவரிடம் பகிர்ந்த ஒரு பகுதியை, அவர் எல்லோருக்கும் நீங்க சொல்லுங்க என்று ஊக்கம் கொடுத்தார். அது ஊட்டமா? ஆப்பா? என்பது போகப்போகத்தான் தெரியும். மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வெட்டி ஆவேசத்தின் காரணமாக இதோ ஆரம்பிக்கிறேன். எனக்கு கஞ்சியேனும் கிடைக்க பிராத்தியுங்கள் JJJ உங்களுக்கும் தருகிறேன்.

சூர்யகுமாரிடம் பகிர்ந்த பகுதியை மட்டும் இப்போ தருகிறேன். மேலும், அனைத்து பகுதியும் ஒன்றின் பின் ஒன்றாக உங்களை இம்சிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

பெயர் காரணம்

என் மனைவி கருவுற்ற போதே, எனக்கு மகன் தான் என்பதில் ஒரு அசட்டு (அசைக்க முடியா) நம்பிக்கை. மனதளவில் ஆணோ, பெண்ணோ எதுவானாலும் ஓகே தான்... ஆனால் பையனா இருந்தால் எனக்கு ஒரு கம்பெனி கிடைக்குமே என்ற கேல்குலேஷன் தான் JJJ அதே போல், டாக்டரின் பரிசோதனையில் 4 மாசத்துலேயே தெரிஞ்சிருச்சு ... நமக்கு பிறக்கப்போவது பையன் தான் என்று. அன்றைய நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே கிடையாது.... எவ்வளவு வார்த்தை போட்டாலும் அந்த உணர்வை கொடுக்கலாகாது. பையன் தான்னு உறுதியானவுடன் அப்படி ஒரு பிரகாசமான சிரிப்பு.... இன்னும் அந்த காட்சி கண் முன்னால் வந்துப்போகிறது. (நான் நார்மலா சிரிச்சாலே ஊரே முரைக்கும்.... இதுல பிரகாசமான சிரிப்பென்றால், நீங்களே யோசிச்சுக்கோங்க).

ஆனால் கடைசி வரைக்கும் எனக்கு பிறக்கப்போவது பையன் என்று யாருக்கும் சொல்லவில்லை. தெரியவில்லை என்றே சமாளித்தேன், என் அம்மா உட்பட. பிறந்த நாள் அன்று நடந்த சம்பவம் பற்றி பின்னே சொல்கிறேன். இப்போ பெயர் காரணத்திற்கு வருவோம்.

டாக்டர் சொன்னவுடன், என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.( எப்போ? 4 மாசத்திலிருந்து....) எப்படியும் ஊருக்கு போனா, ஜாதகம், நியூமராலஜின்னு சொல்லி தாளிப்பாங்கன்னு என்று முடிவு பண்ணி... என்னவா இருந்தாலும் A முதல் Z க்குள் தானே வரும் என்று அதிபுத்திசாலியாக யோசித்து, குழந்தைக்கு பெயர் தேட ஆரம்பித்தேன்..
ஆஸ்பத்திரியில்
’A' எழுத்தில் ஆரம்பிக்கும் எனக்கு பிடித்த எல்லா பெயர்களையும் தேடி தேடி தொகுத்தேன். அதே போல B, C, D என. உதாரணம் - A என்றால் அகில், அபிலேஷ், அபினௌவ், என ஒரு பெரிய லிஸ்ட் B என்றால் பிஜேஷ், பீமா, புவன் என ஒவ்வொரு எழுத்திற்கும் மாசக்கணக்காக தேடி ஒரு டேட்டாபேஷ் ஃபைலே போட்டுட்டேன். (MS Excel file).

இவ்வாறு V வரை தொகுத்து, X, Y, Z ஐ நிராகரித்தேன். எப்படியும் A to V குள்ள தான் வரும், X,Y,Z வரவாப்போகுதுன்னு நினைத்துக்கொண்டேன்..... எனக்கு தனிப்பட்ட முறையில் மிக மிக பிடித்த பெயர்கள் ப்ரனாவ், பீமா, பிரசன்னா.. முடிந்தால் எல்லோரையும் சமாதானம் செய்து ப்ரானவ் வைத்து விடலாம் என்பது திட்டம்.


னால் விதி வலியது பாஸ்....ஜத்ின் மேலம்பிக்கையில்லை என்றாலும், பையின் வாழ்க்கையில் விளையாடக்கூடு என்று அம்மா சொல்லிட்டாங்க.... அால் ஜம், நியூமாலிப்பி வைக்காம் என்று சொன்னாங்க. (நாமிர்பார்த்ானே!). முக்குள் நக்கான் எல்லா எழத்ுக்கிலும் பெயர் இருக்க... அப்புறம் என்ன ம் பாலுமார...??? என்ரினைப்பு. அப்பியே செய்யாம் ம்மி என்று ஜோசியிடம் போனோம். என் மில், நியூமாலிலிஞ்சி போன, நாமொல்றெயில் சில எழத்ுக்கை (A,R,S) போல ோ ஒன்னு கூட்டி கிப்பாங்க என்றிடத்ிரான எண்ணம். அப்பும், P or Bலந்தால் சூப்பர் என்று இருமாப்போனேன். என் திிட்டம்அனத்ும் அப்பொறுங்கியு....

கிராதகன், y எழுத்தை தந்தான். சாய்ஸே கொடுக்கலை பிக்காலிபய... தலையே சுத்திருச்சு....அய்யகோ, நம்ம லிஸ்ட் எல்லாம் போச்சான்னு...!!! :):):) Y’ல யோசித்தால், மண்டை எல்லாம் காயுதே தவிர வேற ஒன்னும் நடக்க மாட்டிது. யோகேஷ், யோகேஷ்வரன், யோகன், என ஒருவாறு ரெடியானது.
 

யோகேஷ், ஓகே என நினைத்து சொல்லிப்பார்த்தேன், மனைவி விட்டா ஓடி வந்து ாலத்சாத்துவா போல. நல்ல வேலை, அவளால் நடக்க முடியவில்லை:):):) இருந்தும் மனசு முழு திருப்தி எனக்கேயில்லை. எங்க அம்மாவிற்கு யோகேஷ் பிடிச்சது. ப்ரனாவ்’ என்ற பெயர் என்னை போட்டு தாக்கியது. கெஞ்சிப்பார்த்தும் யாரும் ஒத்துக்கவேயில்லை. இறுதியாக அம்மாவின் ஆசைக்காகோகஷ்ல இரந்தயோக’வும், ப்ரனாவ்’ல் இருந்து ’வ்’ வையும் சேர்த்து ஒரு புது பெயர் சொன்னேன். யோகவ் என்று. 

யோகவ்’வா??? அப்படின்னா...??? என்னாது... யோகவ் வா..?? என்னடா பேரு...அத்தனை பேரும் என்னை பார்த்த பார்வை இருக்கே....அப்பப்பா.....!!! என்னா அர்த்தம் என்று கேட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க.... யோகம் என்று பொருள்ன்னு எல்லோருக்கும் அடிச்சு விட்டேன். எல்லோரும் என்னை ஏற இறங்க பார்த்தாங்க. சிலர் பார்த்தே, எங்க போட்டிருக்கு, எங்கே எனக்கு காட்டு என்று டீடெயில் வேற.... :):):)

அடுத்து நியூமராலஜி மேட்டர்.... கூட்டு எழுத்து 1 வரனும் என்று சொல்லிட்டான், அப்பதான் பிரகாசமா இருக்கும் என்று பிட்டு வேற. பையன் வாழ்க்கைடா, ஹரி... நீ தான் எல்லா எழுத்திற்கும் அதன் எண் எவ்ளோ என்று எடுத்து வெச்சுருக்கியே... அட்ஜஸ்ட் பண்ணு நல்லா கூட்டி சொல்லு என்று அம்மா அன்பாக சொன்னாங்க.... ஒரு சைண்டிஸ்ட் (Scientist) கூட சீக்கிரம் பதிலை கண்டுபுடிச்சுருவான் போல.... இது அவ்ளோ கஸ்டமா இருக்கு...
ும் யோகும்
 என் மகன் வளர்ந்து, எனக்காக என்னடா அப்பா சேர்த்து வெச்சன்னு கேட்டிறக்கூடாது பாருங்க.. அதனால் எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியா H.Prasad அவன் பெயரில் சேர்த்தேன். இன்ு காரம் - ஒரேளான் பெரர்ய ஆளாகிட்டேனா, பிரத் ஃபேமிலின்னு பெருமையா என் மன் போட்டுக்காம்ல... :) :) :) .(அம்பானி ஃபேமிலி மிரி)  ஒரு வழியாக Yogev.H.Prasad என்று முடிவானது. எல்லோரும் அது என்னடா H.Prasad....??? ஒன்னு H.ன்னு இனிசியல் வை, இல்லைன்னா H.P என்று வை. (என் மனைவி பெயர் பிரகலா, அதனால்)

ஃபாரின் போனா, இவனுங்க இப்படி தான் என்று பாராட்டு பத்திரம் மூக்குமுட்ட நிறைய கொடுத்தாங்க... புதுசு புதுசா யோசிக்குறாங்கன்னு.... :) நம்ம சொல்றது யார் கேட்குறான்னு....:சொந்தங்கள் பாசப்பாட்டு :):):) இங்கும் சிக்கல், அது என்ன Yogev, yoghav என்று தானே வரனும் என்று...... இல்லை இல்லை, இதான் நல்லா இருக்குன்னு முடிவு பண்ணிட்டோம் என்று சமாளித்தேன். கூட்டு எழுத்து 1 வரனுமே....:)

எங்கம்மா, H. Yogev Prasad ன்னு எழுது என்று சொல்லிட்டே இருந்தாங்க, கடைசி வரைக்கும். அது என்னடா Yogev.H.Prasad என்று. நான் பாஸ்போர்டில் இப்படி இருந்தால் தான் எழுத ஈஸி என்று சால்ஜாப்பு சொல்லிட்டேன்...

ஏனோ, இவ்ளோ கலேபரத்திலும் இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடித்தது. இப்போ எல்லோரும் இந்த பெயர் சூப்பரா, புதுசா இருக்கே என்று சொல்லும் போது இக்காட்சிகள் நினைவிற்கு வர தவறுவதில்லை.... :):):)

ஆனால் ஒன்று...!!! இந்தியாவுல இந்த பெயர் கொண்ட ஒரே ள் என் மகன் தான். பிறகு கூகுளாண்டவரிடம் தேடிய பொழுது இது ஹீப்புரூ பெயர் என்று இருந்தது ஆச்சர்யமே...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா
பாபாபா
பாபா ....!!! (உங்கூச்சு சத்ம் எனக்கு கேட்குங்கோவ்....)


வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

The Alchemist - இறுதி பகுதி

முதல் பகுதி படிக்க
http://nondavan.blogspot.com/2013/02/the-alchemist.html

இரண்டாம் பகுதி
இவனும் அந்த அந்நிய பையன் மேல் நம்பிக்கை வைத்து அவனையே பின்தொடர்கிறான். மார்க்கெட்டில் சற்று கூட்டம் அதிகமாக இருக்கவே வைத்த கண் வாங்காமல் அவனை பின்தொடருகிறான். மார்க்கெட்டின் ஓர் இடத்தில் போர்வாளின் கலைநயம் இவனை சில மணிதுளிகள் கட்டிப்போடவே உறைந்து அதைக்காணுகையில், வழிகாட்டும் அந்தையகாணவில்லை. பிறஅவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அக்கடைகாரன் இவனை எச்சரித்தது இதுதான் என தற்போதுதான் உணர்கிறான். தன் பையில் ஏதேனும் தேறுமா? என பார்க்கையில் ஒரு பைசாக்கூட இல்லை. தன் விதியை நினைத்து நொந்துக்கொள்கிறான். மிகுந்த குழப்பத்தில், மெல்சிஜெடெக் கொடுத்த உரிம் & துமிம் கற்களைக்கொண்டு தன் புதையலைத்தேடி பயணம் தொடரலாமா அல்லது நாட்டிற்கே திரும்பலாமா என பார்க்கிறான். தொடரலாம் என விடை கிடைக்கவே மார்க்கெட்டை கடந்து ஒரு சிறிய மலைமீது ஏறி மிகந்திரத்ுடன் பயணிக்கிறான்.

கையில் நையைசூட இல்லை, கடும்பசியின் காரணத்தால் ஒரு படிகக்கடையின் (Crystal Shop) வாசலில் நின்று அதன் முதலாளியிடம், ான் கடையின் சன்னல்களை துடைக்கிறேன், அதற்கு பதிலாக தனக்கு உணவு தருமாறு கூறிவிட்டு அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் சுத்தப்படுத்த ஆரம்பிக்கிறான். அச்சமயம் சில வெளிநாட்டவர்கள் வந்து சில பொருட்களை வாங்குகிறார்கள். கடையின் முதலாளி, இை நல்லுனாகார்க்கிறார்.ேலும் இவனை அழைத்துக்கொண்டு சாப்பிட போகிறார். இவன் கதையை கேட்டவுடன், இங்கேயே வேலை செய்ய சம்மதமா என வினவுகிறார். இன்று ஒரு நாள் வேலை செய்கிறேன்; அதற்கான பணத்தில் எகிப்து செல்லும் நோக்கத்தை கூறுகிறான். கடைக்காரர், எகிப்து செல்ல நீ என்னுடன் ஓராண்டுக்கு மேலாக வேலை செய்தாலும் கூட செல்வது கஸ்டம், அது வெகுதொலைவில் இருக்குமென்று எடுத்துரைக்கிறார். வேணுமென்றால் ஊருக்கு போக பணம் தரேன், நாளையே ஊருக்கசெல் என உதவ முன்வருகிறார். இவன் சிறிது நேரம் பிலும் சொல்லாமல், இறுதியாக வேலை செய்ய சம்மதிக்கிறான்.

படிகக்கடை முதலாளியின் வாழ்க்கையும், கடையின் நிலைமை பற்றியும் இச்சந்தர்ப்பத்தில் அறிகிறான். கடையில் தொழில் சூடுப்பிடிக்கிறது. இவனுடைய ஒரே குறிக்கோள், கடுமையாக உழைத்து வேண்டிய பணத்தை சேர்த்துக்கொண்டு ஆட்டுமந்தைகள் வாங்கிக்கொண்டு எகிப்து நோக்கி செல்வதே. கடை பெரியவர், பொதுவாக ரிஸ்க் எடுக்க தயங்குபவர்; நல்ல மனிதர்; இவனின் தேடலின் தீவிரத்தை இவனைவிட நன்கு உணர்ந்தவர். இவனும் கடைக்காரரின் வாழ்க்கை பற்றிய கண்னோட்டமும், கனவு காண்பதின் முக்கியத்துவத்தையும் அவரிடம் கற்கிறான். 

11 மாதத்தில் கடை வியாபாரம் நன்கு வளர்ச்சியடைகிறது; இவனுக்கும் கமிஷன், சம்பளம் என நன்கு கவனித்துக்கொள்கிறார் அக்கடையின் முதலாளி. இதனால் வேண்டிய கையிறுப்பு பணமும் கிடைக்க வேலையில் இருந்து விடைப்பெறுகிறான்.

தான் முன்பு ஏமாந்துப்போன அதே பாரில் 11 மாதம் கழித்து மீண்டும் போய் அமர்கிறான். ஊருக்கு சென்று தன் பெற்றோர்களை சந்த்தித்துவிட்டு தன் பயணத்தை தொடரலாம் என்றவனுக்கு, கேரவேன் ஒன்று அல் ஃபயூம் (எகிப்தின் பாலைவனச்சோலை) நோக்கி செல்கிறது என்ற தகவல், திசை திருப்புகிறது. அங்கு ஒரு ஆங்கிலேயன் அறிமுகமாகிறான். காரோட்டுனர், தன்னுடைய சட்டதிட்டங்கள் பற்றிக்கூறி அனைவரையும் வண்டியில் ஏறச்சொல்கிறார். அதில் பலதரப்பட்ட நபர்கள் பயணிக்கிறார்கள். 


பயணத்தின் ஊடே இருவருக்கும் இடையில் நல்ல நட்பு மலர்கிறது. ஆங்கிலேயன், தான் ஒரு மிகப்பெரும் அல்கெமிஸ்டாக (ரஸவாதியாக) முயல்வதாகவும், எகிப்தில் 200 ஆண்டுகள் உயிர்வாழும் சிறப்புமிக்க அல்கெமிஸ்ட் (ரஸவாதி) இருப்பதாகவும், அதற்காகத்தான் இப்பயணம் என தன் பயனத்தின் காரணத்தை கூறுகிறான். எகிப்தில் இருக்கும் ரஸவாதியால் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என கூறுகையில் அதிசியக்கிறான். இப்படியெல்லாம் உலகத்தில் இருக்கிறார்களா என தனக்குள் சிந்திக்கிறான். 

இவன் வானத்தை, நட்சத்திரத்தை, காற்றை, சூரியனை என இயற்கையை, அதன் மொழியை அறிய முற்பட்டு அதில் ஒரு ஆனந்தம் காண்கிறான். மேலும் இவன் ஆங்கிலேயனை பார்க்கையில் அவன் எதிலும் நாட்டமில்லாமல் நிறைய புரியாத புத்தகங்களுடன் எந்நேரமும் பயணிக்கிறான். இடையில் ஒட்டகத்தின் ஓசையை கவனித்து, அதன் மொழியை ஆடுகளின் மொழிப் போலவே இயல்பாக அறியமுடிகிறது. தன் ஆத்மா சொல்வதை எந்த தொந்தரவும் இல்லாமல் கேட்க முடிகிறது. இடையில் பழங்குடியினர் சண்டை காரணமாக தங்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு தொடர்கிறது.

ஒரு வழியாக, அல் ஃபாயூமை அடைகிறார்க்ள். (அல் ஃபயூம் என்பது நைல் நதிக்கரையின் படுகையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான பாலைவனச்சோலை.) இங்கு தங்கிருக்கையில் ஃபாத்திமா என்ற அழகு தேவதையை காண்கிறான். அவள் பழங்குடியின தலைவரின் மகள் என அறிகிறான். பொதுவாக அரபிப்பெண்களின் கட்டுப்பாடு மிக அதிகம். அதையும் மீறி அவளுடன் பேச முயலுகிறான். சில நாட்களில் இருவரும் காதல் கொள்கிறார்கள். இருவருக்குமான காதல் அவ்வளவு அருமையாக இருக்கும்... தமிழ் பதிப்பில் பின்னிபெடல் எடுத்திருப்பாங்க என்று நினைக்கிறேன்.

தான் கற்ற உலக மொழியின் மூலம் பழங்குடியின தலைவருக்கு ஆருடம் கூற, அது அப்படியே நடந்தேறுகிறது. அதன் காரணமாக அவர்களின் கூட்டத்திற்கு ஆலோசகராக (கவுன்சிலர்) ேர்வாகிறான். இதன் பொருட்டு இவனுக்கு நிறைய பொற்காசுகளம், வசதியும் செய்து தருகிறார்கள். தன் லட்சியத்தை விட்டுவிட்டு இவளுடனே காலத்தை கடக்கலாம் என்ற என்ணம் வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் எதேச்சையாக ரஸவாதியை காண்கிறான். அவரின் மேல் உள்ள ஈர்ப்பால் அவரை பின்தொடர்கிறான்.

காதலா? லட்சியமா? என்ற தடுமாற்றம் ஏகத்திற்கு வருகிறது. ஃபாத்திமாவுடன் வாழ முடிவெடுக்கும் போது, அல்கெமிஸ்ட் (ரஸவாதி) அறிவுரை கூறுகிறார். மனம்மாறி ஃபாத்திமாவிடம் தன் லட்சியத்தை நோக்கி செல்வதாகவும், தான் மீண்டும் திரும்பி வந்து மனமுடிப்பதாக கூறுகிறான். 

அவளிடம் விடைபெற்று ரஸவாதிவுடன் எகிப்து பிரமிட் நோக்கி தன் பயணத்தை தொடர்கிறான். ரஸவாதியிடம் உலோகத்தை தங்கமாக மாற்றும் வித்தையை கற்றுத்தருமாறு அடிக்கடி வினவுகிறான். (அல்கெமிஸ்ட்) ரஸவாதி தன்னை தானே உணரும் வாயிலாக, உலக மொழி கற்களாம் என்ற உண்மையை பல உதாரணங்களுடன் கூறுகிறார். 

தங்களின் பயணத்தில், ஒரு பழங்குடி இன கும்பல் இவர்களை ஒற்றர்கள் என சந்தேகப்பட்டு, சிறை வைக்கிறார்கள். ரஸவாதி, தாங்கள் ஒற்றர்கள் இல்லையெனவும், இத்தலைவனை காண பை நிறைய பொற்காசுகளை இப்பையன் கொண்டு வந்துள்ளான் எனவும், இவனின் ஆற்றல் மகத்தானது எனவும், காற்றோடு காற்றாக பப்பான் என்று அனைவரையும் வியக்க வைக்கிறார். அப்படியெனில் ரெண்டு நாட்களில் காற்றோடு காற்றாக பறப்பதை காண்பிக்குமாறு கட்டளையிடுகிறான். இவன் திடுக்கிட்டு அல்கெமிஸ்டை பார்க்கிறான். தன்னுடய பொற்காசுகளால் ரெண்டு நாள் சாவை தள்ளிப்போட்டுள்ளதாக கூறும் அல்கெமிஸ்ட், முயன்றால் முடியும் என்றும் இவனுக்கு அந்த ஆற்றல் இருப்பதாகவும் தெம்பூட்டுகிறார். 

மூன்றாவது நாள், தலைவனின் கட்டளைக்கிணங்க இவன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி இயற்கையுடன் பேச முயலுகிறான். இதில் பூமியிடனும், காற்றுடனும், சூரியனுடனும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறான். இவன் காற்றுடன் பேசுகையில்  முன்பெப்போது இல்லாத வகையில் சூறாவளிக்காற்று அங்கு வீசுகிறது. அனைவரும் அல்லாவின் (கடவுளின்) கருணை என மெச்சுகிறார்கள். கடைசியாக இவன் காற்றால்  அடித்து வேறொரு இடத்தில் நிற்கிறான். தான் செய்த செயலை தன்னாலேயே நம்ப முடியாமல் அல்கெமிஸ்டிடம் திளைக்கிறான். அப்பழங்குடியுனர் மிகுந்த ஆனந்தத்தில் இவர்களுக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்புகிறார்கள். 

இருவரும் தங்களின் பயணத்தை மீண்டும் பிரமிட்டை நோக்கி தொடர்கிறார்க்ள். வழியில் ஒரு துறவி வீட்டில் அடைக்களம் கேட்டு அடைகிறார்கள். அல்கெமிஸ்ட், அடுப்பறைக்கு சென்று வெரும் பத்ிரத்(உலோகத்தை) உருக்கி தங்கமாக மாற்றிக்காட்டுகிறார். 4 பங்காக பிரித்து, இரண்டை இவனுக்கும், ஒன்றை துறவிக்கும் தருகிறார். துறவி அதைப்பெற மறுக்கையில், தங்களிடம் இருக்கட்டும், இவன் மீண்டும் திரும்புகையில் தேவைப்படினெனில் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்ளட்டும் என அல்கெமிஸ்ட் கூற, அதை பெற்றுக்கொள்கிறார் துறவி. 

மேலும் இவனிடம் இருந்து விடைப்பெற்றுக் கொள்கிறார். தான் வந்த பாதையிலேயே பயணிக்கிறார். இவன் பிரமிட்டை அடைந்து, அங்கு பூமிக்கியில் தோண்ட ஆரம்பிக்குறான். மிகுந்த சோர்வடைகையில் அங்கு சில திருடர்கள் வந்து இவனை சூரையாடுகிறார்கள். பலத்த அடி, ரத்த வெள்ளத்தில் இருக்கும் இவனிடம் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார்கள், அல்கெமிஸ்ட் கொடுத்த தங்கத் தட்டின் இரண்டு பங்கு உட்பட. வாழ்க்கை வெறுத்து தான் பயணித்த பாதையை நினைத்துப்பார்க்கையில் தான் அடைந்த அனைத்தையும் நினைத்து பெருமிதம் கொள்கிறான். 

இடையில் சேலத்தின் அரசன் மெல்சிஜெடெக் சொன்ன ஒரு கோடாளி கதை நினைவு வரவே, முயற்சியை விடாமல் மீண்டும் தோண்டுகையில் ஒரு புதையல் அகப்படுகிறது. மெல்சிஜெடெக்கின் கவசம் போலவே ிலைமிக்குடியையல் கிடைக்கிறது. மனதில் ஃபாத்திமாவை நோக்கி செல்வதையும், மனமுடித்து ஸ்பெயினுக்கு செல்வதையும், அந்த மூதாட்டிக்கு பத்தின் ஒரு பங்கு மறக்காமல் கொடுக்க வேண்டும் என்ர எண்ணத்துடன் நிறைவடைகிறது கதை.

என் கத்

படிக்க எந்த இடத்திலும் Bore அடிக்கவோ, சோர்வாகாத எழுத்து நடை. அதே போல இப்புத்தகம் எப்படி ஆறதை கோடி விற்றது என்னும் எண்ணம் தோன்றாமல் இல்லை. இன்னும் இப்புத்தகம் உலகில் அதிகம் விற்கப்படும் நாவலின் பட்டியலில் உள்ளது. கட்டாயம் படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று, அட்லீஸ்ட் அதில் என்ன இருக்கு என்று நீங்கள் அறியவேனும். (நான் செய்தது போல :) ) நம்ப முடியா பல காட்சிகள் இதில் அரங்கேற்கிறது.சுவாரஸ்யம் கி பிற்பி நிறையுருக்கிவிட்டேன். ீங்கள் பித்ால் உணர்வீர்கள். மேலும், ிழில் ூள் கிளப்பாம் என்றோன்றுகிறு. 


இக்கையில் கையின் நாயன் ’சண்டியாகோ’ ெயர் ஒன்றோ இரண் ுறை மட்டுமஆரம்பத்ில் வும். நாவல் முழுவும், பையன் என்று மட்டுமே இருக்கும். அே பாணியில் நானும், பெயர் குறிப்பிடாமல் எழுயற்சித்ேன். அால் ான், இவன் என்று எல்லா இடத்ிலும் போட்டுள்ளேன்.

பௌலோ கோல்ஹோ ஒரு பாதியாரா இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியத, எனக்கு. ஆனால், இவரின் அடுத்த நாவல் 'Eleven minutes' வாங்கி படிக்கையில் அப்படியே ஆடிப்போயிட்டேன். முற்றிலும் மாறுதலான கதை, எழுத்து நடை. அதில் ஆரம்பமே அமர்க்களம்.


மேலும் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். ஆங்கில நாவல் என்றாலே ஏதோ கஷாயத்தை சாப்பிடுவது போல முகம் கோணலா போகும் எனக்கு. பல சொற்களுக்கு டிக்‌ஷினரி தேவைப்படுமே என்ற உண்மை தான். ஏனெனில் நம்ம ஆங்கில புலமை அப்படி...!! 

ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் - நான் பள்ளி பயின்றபோது எனது ஆங்கில வாத்தியார் When are you getting up in the morning to come to school’ என்ற கேள்விக்கு, 9.30 சார் என்று சத்தம் போட்டு சொன்னேன். என் புரிதலில் எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு வருவாய் என்று கேட்கிறார் போல என நினைத்துக்கொண்டேன் JJJ. பள்ளியே சிரித்தது. எதுக்குடா சிரிக்கிறீங்க் என்று ஒன்னும் அறியாதவனாக நண்பர்களை கேட்டேன். மாஸ்டர் என்னை வெளியே நிற்க வைத்துவிட்டார்.... நான் கரெக்டா தானே சொன்னேன் என்று மண்டை குழம்பி போன சம்பவம் என் ஆங்கில புலமைக்கு சான்றுJJJ

துணிந்துதான் களத்தில் இறங்கினேன்
, ஆங்கிலமா நாமா பார்த்திருலாம் ஒரு கை என்று. அதிசயம், என்னை போல தற்குறிகளும் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எளிமையான ஆங்கில எழுத்துகளால் புரியும் வண்ணம் இருந்தது மிகுந்த ஆச்சர்யம் தந்த விஷயம்.

மேலும் எழுத்தாளர் திரு. சாருவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்; அவர் மூலமாகத்தான் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கார் என்றே எனக்கு தெரியும்.